بِسْمِ ٱللَّـهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
ஏக-இறைவனின் பெயரைக் கொண்டு – சர்வ-வல்லவன், மிக்க-கருணையாளன்.
‘அர்-ரஹ்மான் (الرَّحْمٰنِ) என்ற சொல்லுக்கு பொதுவாக “அளவற்ற அருளாளன்” என்று மொழியாக்கங்களில் இருக்கும், குர்ஆனில் இவ்வார்த்தையின் பயன்பாட்டை கவனிக்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் உணர்வை “சர்வ-வல்லவன்” என்ற சொல்லால் இன்னும் நெருக்கமாக வெளிப்படுத்த முடிவதை உணர்ந்தேன்.
الٓمٓ
1. அலிஃப் லாம் மீம்.
ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
2. அது வேதமே, ‘அதில்’ சந்தேகமே இல்லை, உணர்ந்தறிந்து-பண்படுவோருக்கு வழிகாட்டியாகும்.
a] Realated Ref – [10:37];
b] Taqwa: Often translated as ‘fear’ or ‘piety’, Taqwa encompasses a deeper meaning of self-discipline, mindfulness, and realization of one’s actions and their consequences, leading to a state of being mindful of God’s presence and guidance.
ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ
3. அவர்கள் மறைவானதுடன் நம்பிக்கை கொள்கின்றனர், தொடர்பையும் நிலைநாட்டுகின்றனர், அவர்களுக்கு நாமளித்த வாழ்வாதாரத்தில் இருந்து செலவும் செய்கின்றனர்.
Salat means, according to the Qur’an, connection or the act of following, being closely-connected. This understanding comes especially from [75:31,32].
وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ
4. அவர்கள் உமக்கு இறக்கிவைக்கப் படுவதையும், உமக்கு முன்னர் இறக்கிவைக்கப் பட்டதையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், மறுமையுடன் அவர்கள் உறுதியாய் உள்ளனர்.
أُو۟لَـٰٓئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
5. அத்தகையோரே தங்களின் பரிபாலனிடம் இருந்துள்ள வழிகாட்டுதலின் மீது உள்ளோர். அத்தகைய அவர்களே வெற்றியாளர்கள்.
[2:5, 3:104, 7:8, 7:157, 9:88, 23:102, 24:51, 30:38, 31:5, 59:9, 64:16]
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
6. நிச்சயமாக நிராகரித்தபடி உள்ளார்களே, அவர்களை எச்சரிப்பதும் அல்லது அவர்களை எச்சரிக்காமல் இருப்பதும், அவர்கள்மீது சமமே. நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
خَتَمَ ٱللَّـهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰٓ أَبْصَـٰرِهِمْ غِشَـٰوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
7. அவர்களது இதயங்கள் மீதும், அவர்களது செவியின் மீதும் – இறைவன் முத்திரையிடுகின்றான். அவர்களின் பார்வை மீதும் திரையுள்ளது. அவர்களுக்கு பெரும் தண்டனையும் உள்ளது.
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّـهِ وَبِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
8. தாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாமல் – நாங்கள் இறைவனுடனும், மறுமை நாளுடனும் நம்பிக்கை கொள்கின்றோம் எனக் கூறுவோரும், மனிதர்களில் உள்ளனர்.
“நம்பிக்கையைப் பற்றி [4:49-50, 58:1-6]“
يُخَـٰدِعُونَ ٱللَّـهَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَمَا يَخْدَعُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
9. இறைவனையும், நம்பிக்கை கொள்வோரையும் அவர்கள் ஏமாற்றுகின்றனர். தங்களது ஆன்மாக்களை அன்றி, அவர்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லை. உணர்ந்து கொள்பவர்களாகவும் இல்லை.
فِى قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ ٱللَّـهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْذِبُونَ
10. அவர்களது இதயங்களில் நோயுள்ளது. ஆக, இறைவன் நோயை அவர்களுக்கு அதிகமாக்குகின்றான். அவர்கள் பொய்யர்களாக இருப்பதைக் கொண்டு, அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனையும் உள்ளது.
[10:57]
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
11. பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என, அவர்களிடம் கூறும்போது – கூறுகின்றனர், நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தவாதிகளே.
أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ
12. நிச்சயமாக அவர்கள், அவர்களே குழப்பவாதிகள் அல்லவா! என்றாலும் உணர்ந்து கொள்பவர்களாக இல்லை.
وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓا۟ أَنُؤْمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَـٰكِن لَّا يَعْلَمُونَ
13. மனிதர்கள் நம்புவது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள் என அவர்களிடம் கூறும்போது, கூறுகின்றனர் மூடர்கள் நம்புவது போன்று நாங்கள் நம்புவதா? நிச்சயமாக அவர்கள், அவர்களே மூடர்கள் அல்லவா! என்றாலும் அறிந்து கொள்பவர்களாக இல்லை.
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ إِلَىٰ شَيَـٰطِينِهِمْ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُونَ
14. நம்பிக்கையோடு உள்ளவர்களை சந்திக்கும்போது, கூறுகின்றனர் நாங்களும் நம்புகின்றோம்; தங்களின் தீயோர்கள்பால் தனித்திடும்போது, கூறுகின்றனர் நிச்சயமாக உங்களுடனே உள்ளோம், நிச்சயமாக நாங்கள் பரிகசிப்பவர்களே.
ٱللَّـهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ
15. அவர்களுடன் இறைவன் பரிகசிக்க உள்ளான், அவர்களது வரம்புமீறல்களில் அவர்களை நீட்டிக்கின்றான், சுற்றிதிரிகின்றனர்.
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَـٰلَةَ بِٱلْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَـٰرَتُهُمْ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ
16. அத்தகைய அவர்கள் வழிகாட்டளைவிட்டு வழிகேட்டை பரிவர்த்தனை செய்பவர்கள், ஆக அவர்களது வாணிபம் இலாபமளிப்பது இல்லை, வழிகாட்டப் பட்டவர்களாகவும் ஆவதில்லை.
مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّـهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَـٰتٍ لَّا يُبْصِرُونَ
17. அவர்களின் உதாரணம் நெருப்பை பற்றவைக்கும் ஒருவனின் உதாரணத்தைப் போன்றது, அதைச் சுற்றிலும் வெளிச்சமிடும் போது, அவர்களின் ஒளியை இறைவன் பறிக்கின்றான், இருள்களில் அவர்களை விடுகின்றான், பார்ப்பவர்களாக இல்லை.
صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
18. செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள்; ஆக அவர்கள் மீள்பவர்களாக இல்லை.
أَوْ كَصَيِّبٍ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَـٰتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَـٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلْمَوْتِ وَٱللَّـهُ مُحِيطٌۢ بِٱلْكَـٰفِرِينَ
19. அல்லது வானிலுள்ள அடர்மேகங்களை போன்றது; அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளது; இடியோசையில் உள்ள மரண எச்சரிக்கையால், தங்களது காதுகளில் தங்களது விரல்களை ஆக்கிக் கொள்கின்றனர்; இறைவனோ நிராகரிப்பவர்களுடன் சூழ்ந்தவனாகவே உள்ளான்.
يَكَادُ ٱلْبَرْقُ يَخْطَفُ أَبْصَـٰرَهُمْ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوْا۟ فِيهِ وَإِذَآ أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا۟ وَلَوْ شَآءَ ٱللَّـهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَـٰرِهِمْ إِنَّ ٱللَّـهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கின்றது. தங்களுக்கு வெளிச்சமிடும் போதெல்லாம் அதில் செல்கின்றனர், அவர்கள்மீது இருளும்போது நின்றுவிடுகின்றனர்; இறைவன் நாடினால் அவர்களது செவிப்புலனுடன் அவர்களின் பார்வைகளையும் போக்கிவிடுவான். நிச்சயமாக, இறைவன் ஒவ்வொரு விடயத்தின் மீதும் ஆற்றலுடையவன் – அளவிடுபவன்.
Qadeerun (قَدِيرٌ) means – power, measurement.
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعْبُدُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
21. ஓ மனிதகுலமே! நீங்கள் உணர்ந்தறிந்து-பண்படும் பொருட்டு, உங்களது பரிபாலனுக்கு சேவையாற்றுங்கள், அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்பு உள்ளோரையும் படைத்தான்.
Taqwa: Often translated as ‘fear’ or ‘piety’, Taqwa encompasses a deeper meaning of self-discipline, mindfulness, and realization of one’s actions and their consequences, leading to a state of being mindful of God’s presence and guidance.
ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ فِرَٰشًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا۟ لِلَّـهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
22. அவன்தான் உங்களுக்கு பூமியை சமுக்காளமாகவும், வானத்தை கட்டமைப்பாகவும் ஆக்கியுள்ளான்; மேலும் வானிலிருந்து தண்ணீரை இறக்கி, அதைக்கொண்டு கனிவர்க்கங்களை உங்களுக்கு வாழ்வாதாரமாக வெளிவரச் செய்கின்றான். நீங்கள் அறிந்துகொண்டே இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
a] Arabic: firāsh (pl. furush, afrisha) – couch; cushion, pillow; blanket, cover, spread; mattress; bed.
b] Arabic: binā’ – building, structure, edifice, construct.
c] While you know – [2:22, 2:42, 2:75, 2:146, 2:188, 3:71, 3:75, 3:78, 3:135, 8:27, 43:86, 58:14].
d] Realated Verse – [2:165].
وَإِن كُنتُمْ فِى رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا۟ بِسُورَةٍ مِّن مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّـهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
23. நமது சேவகர்மீது நாம் இறக்கிவைப்பதில் சந்தேகத்தில் இருப்பீர்களாயின், அதன் உதாரணத்தில் ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; இறைவனை விடுத்து உள்ள உங்கள் சாட்சியாளர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் தர்மவான்களாக இருப்பின்.
a] Chapter 2, Verse 23 – The Arabic indefinite noun ‘سُورَة’ translates to ‘Chapter’, which can be understood as either singular (‘a chapter’) or plural (‘chapters’);
b] Reference for ‘sūrat’ – [2:23, 9:64, 9:86, 9:124, 9:127, 10:38, 11:13, 24:1, 47:20, 47:20];
c] Arabic: min dūni – besides, to the exclusion of, outside of, excluding, other than, not.
فَإِن لَّمْ تَفْعَلُوا۟ وَلَن تَفْعَلُوا۟ فَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِى وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَـٰفِرِينَ
24. பின் நீங்கள் செய்யாவிடில், நீங்கள் செய்யவே முடியாது; ஆக, மனிதர்களையும், கற்களையும் – தனது எரிபொருளாக கொண்டுள்ள நெருப்பை – உணர்ந்தறிந்து பண்படுங்கள்; நிராகரிப்போருக்காக சித்தப்படுத்தப் பட்டுள்ளது.
Taqwa: Often translated as ‘fear’ or ‘piety’, Taqwa encompasses a deeper meaning of self-discipline, mindfulness, and realization of one’s actions and their consequences, leading to a state of being mindful of God’s presence and guidance.
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا قَالُوا۟ هَـٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَـٰبِهًا وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَـٰلِدُونَ
25. நம்பிக்கை வைத்தவர்களாக, செயல்களில் சீர்பட்டு வருவோருக்கு – நற்செய்தி அளிக்கவும்; நிச்சயமாக அவர்களுக்கு தோட்டங்கள் உள்ளது, அதன்கீழே நதிகள் ஓடிக்கொண்டிருக்கும், அங்கிருந்துள்ள வாழ்வாதாரமாக கனிவர்க்கங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு முறையும், கூறுவார்கள் இந்த ஒன்று முன்னரும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு கொடுக்கப்படுவது அதனுடன் ஒப்பானதுதான்; அதில் அவர்களுக்கு தூய்மையான துணைகளும் உண்டு, அதில் அவர்கள் என்றென்றும் ஆவார்கள்.
a] The word ‘بشر’ refers to human being, or conscious being; and also conveys – glad tidings, or good news. By using ‘liveliness or vitality’ in this verse, I am trying to bridge both meanings, highlighting the connections between human life and the glad tidings.
b] In Arabic, ‘أَزْوَٰجٌ’ can mean pairs, spouses, partners, or companions, depending on the context.
c] The phrase ‘عَمِلُوا الصَّالِحَاتِ’ is often translated as ‘do righteous deeds’, The primary meaning of ‘صَّالِحَاتِ’ is ‘correcting’ or ‘reforming’. To convey this nuance, we use ‘the reforming of actions’ or ‘the correcting of actions’, highlighting the idea of personal growth and improvement.
d] Arabic: mutashābih means – look alike, similar, resembling.
إِنَّ ٱللَّـهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّـهُ بِهَـٰذَا مَثَلًا يُضِلُّ بِهِۦ كَثِيرًا وَيَهْدِى بِهِۦ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَـٰسِقِينَ
26. சிறியதோ அது பெரியதோ, நிச்சயமாக இறைவன் உதாரணமடிக்க வெட்கப்படுவது இல்லை; நம்பிக்கையோடு உள்ளவர்கள், நிச்சயமாக அது தங்களது பரிபாலனிடம் இருந்துள்ள சத்தியம் என்பதை அறிந்து கொள்வார்கள்; நிராகரித்தபடி உள்ளவர்கள், கூறுகின்றனர் இவ்வித உதாரணத்தைக் கொண்டு இறைவன் நாடுவது என்ன? அதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகின்றான்; அதைக்கொண்டு பலருக்கு வழிகாட்டவும் செய்கின்றான்; அக்கிரமக்காரர்களைத் தவிர அதைக் கொண்டு வழிகேட்டில் விடுவதில்லை.
a] The Arabic word ‘بَعُوْضَةً’ has primary meanings such as ‘a little’, ‘small’, or ‘some’. While it can be used figuratively to refer to small insects like mosquitoes or flies, its core sense is more general. For example, ‘وصلنا بعوضةً متأخرين’ (We arrived a little late), I used ‘tiny’ in this verse to convey the idea of whatever is small.
b] Related Verse – 74:31
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّـهِ مِنۢ بَعْدِ مِيثَـٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّـهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
27. அவர்கள் இறைவனிடம் ஒப்பந்தத்தை அதை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகின்றனர், ஒன்றிணைக்கும்படி கட்டளையிடுவதை துண்டிக்கின்றனர், பூமியில் குழப்பமும் செய்கின்றனர்; அத்தகைய அவர்கள் நஷ்டவாளிகள்.
a] Related Verse – [1:5]
كَيْفَ تَكْفُرُونَ بِٱللَّـهِ وَكُنتُمْ أَمْوَٰتًا فَأَحْيَـٰكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
28. இறைவனை எப்படி நிராகரிப்பீர்கள்? உயிரற்றோராக இருந்தீர்கள், பின் உங்களுக்கு வாழ்வளிக்கின்றான், பிறகு உங்களை மரணிக்கச் செய்கின்றான், பிறகு வாழ்வளிக்கின்றான், பிறகு அவனிடமே மீளுகின்றீர்கள்.
a] Related Verse [22:5], [6:60], [23:80], [39:42].
هُوَ ٱلَّذِى خَلَقَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبْعَ سَمَـٰوَٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
29. அவன் – அவன்தான் பூமியிலுள்ளதை ஒருசேர உங்களுக்காகப் படைக்கின்றான்; பிறகு வானத்தின்பால் சமன் படுத்துகின்றான்; அவற்றை ஏழு வானங்களாக சமநிலைப் படுத்துகின்றான்; அவன் ஒவ்வொரு விடயத்துடனும் அறிந்தவன்.
a] The Arabic word ‘ٱسْتَوَىٰٓ’ includes meanings like level, equal, firm, complete, ascended, or established. Here, I’ve tried to incorporate these meanings to explore the nuances of the context.
b] Related verse for Sky and Earth – [3:133]
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌ فِى ٱلْأَرْضِ خَلِيفَةً قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
30. உமது பரிபாலனன் வானவர்களிடம் கூறியதாவது, நிச்சயமாக நான் பிரதிநிதியை பூமியில் ஆக்கப்போகின்றேன். கூறினார்கள், அதில் குழப்பம்புரிவதை அதில் ஆக்கப்போகின்றாயா? இரத்தமும் சிந்தப்படுமே! நாங்களோ உனது புகழைக் கொண்டு மகிமை-போற்றியவர்களாக, உமக்கு தூய்மையானவர்களாக உள்ளோம். கூறினான், நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.
a] The Arabic term ‘خَلِيفَةً (Khalifat)’ generally refers to one who serves as a successor or representative. [38:26]
b] For a deeper understanding, ‘Kingdom-officials’ is used here instead of ‘Angels’, to respectfully convey the fullness of the original Arabic term ‘مَلَـٰٓئِكَةِ’ (Malā’ikah).
وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَـٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَـٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
31. அதன் ஒவ்வொரு பெயர்களையும் ஆதமுக்கு அறிவித்துக் கொடுத்தான்; பிறகு வானவர்களிடம் அவற்றை திருப்பினான், பின் கூறினான், இவற்றின் பெயர்களை கொண்டு எனக்கு விவரியுங்கள், நீங்கள் தர்மவான்களாக இருப்பின்.
a] For a deeper understanding, ‘Kingdom-officials’ is used here instead of ‘Angels’, to respectfully convey the fullness of the original Arabic term ‘مَلَـٰٓئِكَةِ’ (Malā’ikah).
قَالُوا۟ سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
32. கூறினார்கள், உமக்கே மகிமை! நீ எங்களுக்கு அறிவிப்பதை தவிர்த்து, எங்களுக்கு ஒரு அறிதலும் இல்லை. நிச்சயமாக நீ நீயே நன்கறிந்தவன் ஞானமிக்கவன்.
a] The Word ‘ḥakīmu’ means – includes ‘wisdom’ and ‘judgement.’
قَالَ يَـٰٓـَٔادَمُ أَنۢبِئْهُم بِأَسْمَآئِهِمْ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسْمَآئِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّىٓ أَعْلَمُ غَيْبَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
33. கூறினான், ஓ ஆதமே! அவற்றின் பெயர்களை கொண்டு அவர்களுக்கு விவரிக்கவும். அவற்றின் பெயர்களை கொண்டு அவர்களுக்கு விவரித்ததும் கூறினான், நான் உங்களுக்கு கூறவில்லையா! வானங்கள் மற்றும் பூமியின் மறைவானதை நிச்சயமாக நான் அறிவேன்; நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அறிவேன்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ أَبَىٰ وَٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَـٰفِرِينَ
34. பின் வானவர்களிடம் நாம் கூறியதாவது, ஆதமுக்கு மரியாதை செய்யுங்கள்; ஆக மரியாதை செய்தனர் இப்லீஸைத் தவிர, மறுத்தான், பெருமையும் கொண்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்.
وَقُلْنَا يَـٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
35. பின் கூறினோம், ஓ ஆதமே! நீரும், உமது துணையும் இத்தோட்டத்தில் வசிக்கவும்; நீங்கள் விரும்பியவாறு தாராளமாக அதிலிருந்து புசியுங்கள்; மேலும் இந்த மரத்தை இருவரும் நெருங்காதீர்கள், கலகக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்கள்.
a] The Arabic word ‘سَكَنَ’ means – ‘Dwelling’ and ‘Tranquility’.
b] Related verse – 7:19.
فَأَزَلَّهُمَا ٱلشَّيْطَـٰنُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَـٰعٌ إِلَىٰ حِينٍ
36. பின் அதில் தீயோன் இருவரையும் தடுமாறச்செய்தான். பின் எதில் அவ்விருவரும் இருந்தார்களோ, அதிலிருந்து அவ்விருவரையும் வெளியேறுமாறு செய்தான். பின் கூறினோம், இறங்குங்கள் உங்களில் சிலர் சிலரிடம் விரோதமுள்ளது, பூமியில் உங்களுக்கு தங்குமிடமுள்ளது, ஒரு காலத்திற்கான உணவாதாரமும் உள்ளது.
a] Related verse – 7:24.
فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَـٰتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
37. பின், ஆதம் – தனது பரிபாலனிடம் இருந்துள்ள வார்த்தைகளை அடைந்தார்; ஆக, அவர்மீது மீட்சியளித்தான்; நிச்சயமாக அவன் – அவன் மீட்சியளிப்பவன், மிக்க-கருணையாளன்.
a] Related verse – 20:122.
قُلْنَا ٱهْبِطُوا۟ مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًى فَمَن تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
38. கூறினோம், ஒருசேர அதிலிருந்து இறங்குங்கள். பின் என்ன! வழிகாட்டுதல் – என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு வருகின்றது; ஆக, யார் எனது வழிகாட்டுதலை பின்பற்றுகின்றாரோ – அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
a] Related verse – 20:123.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
39. எவர்கள் நிராகரித்தவர்களாக, நமது அத்தாட்சிகளை பொய்த்து மறுக்கின்றார்களோ – அத்தகையோர் நெருப்பின் கூட்டாளிகள்; அதில் அவர்கள் என்றுமாகின்றனர்.
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّـٰىَ فَٱرْهَبُونِ
40. ஓ இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள்மீது நான் அருளியுள்ள, எனது அருட்கொடையை நினைவுகூருங்கள்; என்னுடனான உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள், உங்களுடனான உடன்படிக்கையை நிறைவேற்றுகின்றேன்; நான் மட்டுமே; ஆக, என்னை அஞ்சிநடங்கள்.
وَءَامِنُوا۟ بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا۟ أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَـٰتِى ثَمَنًا قَلِيلًا وَإِيَّـٰىَ فَٱتَّقُونِ
41. நான் இறக்கிவைப்பதை நம்புங்கள், உங்களிடம் உள்ளதை தர்மமாக்குகின்றது. அதை நிராகரிப்பவர்களில் முதன்மையாக நீங்கள் ஆகிட வேண்டாம். எனது அத்தாட்சிகளை சொற்ப விலைக்கு மாற்றிக் கொள்ளாதீர்கள். நான் மட்டுமே; ஆக, என்னை உணர்ந்தறிந்து-பண்படுங்கள்.
a] Arabic word ‘مُصَدِّقًا’ expresses the principles of validation, verification, confirmation, fulfillment, justice, truth and nature. I have used the word ‘Dharma’ to convey this whole concept.
b] Taqwa: Often translated as ‘fear’ or ‘piety’, Taqwa encompasses a deeper meaning of self-discipline, mindfulness, and realization of one’s actions and their consequences, leading to a state of being mindful of God’s presence and guidance.
وَلَا تَلْبِسُوا۟ ٱلْحَقَّ بِٱلْبَـٰطِلِ وَتَكْتُمُوا۟ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
42. சத்தியத்தை பொய்யைக்கொண்டு கலக்காதீர்கள்; பின் நீங்கள் அறிந்துகொண்டே, சத்தியத்தை மறைத்தோர் ஆவீர்கள்.
a] The Arabic word تَلْبِسُوا۟’ has the meaning of ‘mixing’ as well as ‘wearing’ or ‘clothing’.
b] Related Ref – [3:71]
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱرْكَعُوا۟ مَعَ ٱلرَّٰكِعِينَ
43. தொடர்பினை நிலைநாட்டுங்கள், தூய்மையைக் கொண்டுவாருங்கள், பணிவானவர்களிடம் பணிவை மேற்கொள்ளுங்கள்.
a] Salat means, according to the Qur’an, connection or the act of following, being closely-connected. This understanding comes especially from [75:31,32].
أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَـٰبَ أَفَلَا تَعْقِلُونَ
44. நலம்புரிய மனிதர்களை ஏவுகின்றீர்களா? உங்களது ஆன்மாக்களை மறந்து விடுகின்றீர்களே! நீங்கள் வேதத்தையும் ஓதுகின்றீர்கள். ஆக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلْخَـٰشِعِينَ
45. நிதானம் மற்றும் தொடர்பைக் கொண்டு உதவிதேடுங்கள், அடக்கம்-உடையோருக்கே தவிர நிச்சயமாக அது பெரிதாக உள்ளது.
a] Answer for [1:5] – [2:45], [2:153]
ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَٰجِعُونَ
46. அவர்களே கருத்தில் கொண்டோராவர், நிச்சயமாக அவர்கள் தங்களது பரிபாலனை சந்திப்பவர்கள், நிச்சயமாக அவர்கள் அவனிடமே மீள்கின்றார்கள்.
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
47. ஓ இஸ்ராயீலின் சந்ததியினரே! உங்கள் மீது நான் அருளியுள்ள எனது அருட்கொடையை நினைவுகூருங்கள்; அகிலங்கள் மீது நிச்சயமாக நான் உங்களுக்கு கிருபை புரிந்துள்ளேன்.
وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَـٰعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ
48. உணர்ந்தறிந்து-பண்படுங்கள், ஒரு நாள் ஒரு ஆன்மா ஒரு ஆன்மாவிற்கு ஒரு விடயத்திலும் நிறைவாக இருக்காது, பரிந்துரையும் அதனிடமிருந்து ஏற்கபடாது, அதனிடமிருந்து இழப்பீடும் எடுத்துக் கொள்ளப்படாது, அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَإِذْ نَجَّيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ
49. ஃபிர்அவ்ன் கூட்டத்திடம் இருந்து உங்களை நாம் காப்பாற்றியதாவது, தீங்கான தண்டனையால் உங்களை துன்புறுத்தி வந்தனர், உங்கள் மகன்களைக் துண்டித்தனர், உங்கள் பெண்களை அவமானத்தோடு வாழவிட்டனர்; அதில் உங்கள் பரிபாலனிடம் இருந்து பெரும் பரீட்சை இருந்தது.
وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَـٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ
50. அப்போது அக்கடலை உங்களுக்காக பிரித்தோம், உங்களை காப்பாற்றினோம், பின் ஃபிர்அவ்ன் கூட்டத்தை மூழ்கடித்தோம், நீங்கள் அவதானிக்கவும் செய்தீர்கள்.
وَإِذْ وَٰعَدْنَا مُوسَىٰٓ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَـٰلِمُونَ
51. அப்போது மூஸாவிற்கு நாற்பது இரவுகளை வாக்களித்தோம், அங்கு அதன்பின்னர் அவசரத்தனத்தையே எடுக்கின்றீர்கள், நீங்கள் கலகக்காரர்களே.
The Arabic word “عِجْلَ” does have the meaning of “haste” in addition to “calf.” This meaning is derived from the fact that calves are often associated with speed and agility.
ثُمَّ عَفَوْنَا عَنكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
52. அங்கு அதன்பின்னரும் உங்களை மன்னித்தோம், நீங்கள் நன்றியுடையோர் ஆகும் பொருட்டு.
وَإِذْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَٱلْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
53. அப்போது மூஸாவுக்கு வேதத்தையும் பகுத்தறிதலையும் கொண்டுவந்தோம், நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلْعِجْلَ فَتُوبُوٓا۟ إِلَىٰ بَارِئِكُمْ فَٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
54. அப்போது மூஸா தனது மக்களிடம் கூறினார், ஓ மக்களே! அவசரத்தனத்தை நீங்கள் எடுப்பதைக் கொண்டு, நிச்சயமாக நீங்கள் உங்களது ஆன்மாக்களுக்கே கலகம் புரிகின்றீர்கள்; ஆக உங்களை இரட்சிப்பவன்பால் மீட்சிதேடுங்கள், உங்களது ஆன்மாக்களை வீழ்த்துங்கள், அதுவே உங்களை இரட்சிப்பவனிடம் உங்களுக்கு சிறப்பாக்கும். ஆக உங்களுக்கு மீட்சியளித்தான். நிச்சயமாக அவன், அவனே மீட்சியளிப்பவன் மிக்க-கருணையாளன்.
The Arabic word “عِجْلَ” does have the meaning of “haste” in addition to “calf.” This meaning is derived from the fact that calves are often associated with speed and agility.
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّـهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ
55. அப்போது கூறினீர்கள், ஓ மூஸாவே! இறைவனை வெளிப்படையாக நாங்கள் காணும்வரை, உம்மை நம்பவே மாட்டோம்; ஆக இடிமுழக்கம் உங்களை பிடித்துக் கொள்கின்றது, நீங்கள் அவதானித்தும் கொள்கின்றீர்கள்.
ثُمَّ بَعَثْنَـٰكُم مِّنۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
56. அங்கு நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை எழுப்பினோம், நீங்கள் நன்றியுடையோர் ஆகும் பொருட்டு.
وَظَلَّلْنَا عَلَيْكُمُ ٱلْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَمَا ظَلَمُونَا وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
57. மேகத்தை உங்கள்மீது நிழலிடச் செய்கின்றோம்; அருளானதையும், திருப்தியானதையும் இறக்கிவைக்கின்றோம், உங்களுக்கு நாம் வழங்குகின்ற நல்லவற்றிலிருந்து புசியுங்கள்; நாம் அவர்களுக்கு தீங்கிழைப்பதில்லை, எனினும் தங்களது ஆன்மாக்களுக்கு தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.
மன்னு மற்றும் ஸல்வா
[2:57], [7:160], [20:80]
[முஹம்மத் ஆசாத் எனும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் பின் குறிப்பிலிருந்து]
மன்னு’ என்ற சொல் பாலைவனத்தின் சில தாவரங்களால் வெளியேற்றப்படும் “இனிப்பு, பிசின்” போன்றவைகளை மட்டும் குறிப்பதல்ல, “அருளாக வழங்கப்படும்” அனைத்தையும் குறிக்கின்றது.
அதேபோல், சல்வா’ என்ற சொல் “காடைகளை” மட்டும் குறிப்பதல்ல, “வறுமைக்கு பிறகு மனிதனை திருப்தியடையச் செய்து சமாதானம் அடைய செய்யும் அனைத்தையும்” குறிக்கின்றது.
எனவே, இந்த இரண்டு சொற்களின் கலவையானது, மூஸாவின் மக்களுக்கு இறைவனால் வழங்கப்படுகின்ற வாழ்வாதார பரிசைக் குறிக்கின்றது.
وَإِذْ قُلْنَا ٱدْخُلُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ فَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُولُوا۟ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَـٰيَـٰكُمْ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ
58. அப்போது கூறினோம், இந்த பட்டணத்தில் பிரவேசியுங்கள், தாராளமாக நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து புசியுங்கள், வாயிலில் மரியாதையுடன் நுழையுங்கள், தணிவை கூறுங்கள், உங்கள் குற்றங்களை உங்களுக்காக மன்னிக்கின்றோம், நல்லோர்களுக்கு சீக்கிரமே கூட்டுகின்றோம்.
Arabic word “حِطَّةٌ” – alleviation, relief, mitigation; abasement, debasement, demotion, degradation. [2:58 & 7:161]
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
59. அக்கிரமமாக உள்ளவர்களால் மாறுகிறது, அவர்களுக்கு கூறப்படாததை கூறுகின்றர்; ஆக அக்கிரமமாக உள்ளவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்குகின்றோம், அவர்கள் கலகக்காரர்களாக இருப்பதனால் ஆகும்.
وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّـهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
60. மூஸா தனது மக்களுக்கு தண்ணீர்குடிக்க தேடியபோது கூறினோம், உமது கோலால் அப்பாறையை அடிக்கவும், பின் அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகளாக உதித்தோடின, ஒவ்வொரு மனிதர்களும் தங்களின் பருகுமிடத்தை திடனாக அறிந்துகொண்டர்; இறைவன் வழங்குவதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; குழப்பவாதிகளாக பூமியில் திரியாதீர்கள்.
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَٰحِدٍ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ٱهْبِطُوا۟ مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّـهِ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّـهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ ٱلْحَقِّ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
61. நீங்கள் கூறியதாவது, ஓ மூஸாவே! ஒரே உணவை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆக உமது பரிபாலனை எங்களுக்காக அழையும், பூமியின் விளைச்சலில் இருந்து எங்களுக்கு வெளிபடுத்தித் தருவான், அதன் கீரைகளை, அதன் வெள்ளரிக்காயையும், அதன் பூண்டுகளையும், அதன் பருப்புகளையும், அதன் வெங்காயங்களையும். கூறினார், எது சிறப்போ அதைவிட்டு, எது தற்காலிகமோ அதனை மாற்றிக் கொள்கின்றீர்களா? ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள், நிச்சயமாக நீங்கள் கேட்பது உங்களுக்குள்ளது, மேலும் இழிவும் வறுமையும் அவர்கள்மீது அடித்தது, இறைவனிடம் இருந்து கோபத்திற்கும் ஆளானார்கள். அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரிப்பவர்களாக இருக்கின்றனர், சத்தியமின்றி நபிமார்களை கொலையும் செய்கின்றனர், அது என்னவென்றால் மாறுசெய்கின்றார்கள் இன்னும் வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றார்கள்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
62. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொள்கின்றார்களோ – அவர்கள் ஹாதுக்களாயினும், நசாராக்களாயினும், சாபியீன்களாயினும் – எவர் இறைவனைக் கொண்டு, மறுமை நாளை நம்பிக்கை வைத்து, செயல்களில் சீர்பட்டு வருகின்றாரோ – பின், அவர்களுக்கு அவர்களின் வெகுமதி, அவர்களது பரிபாலனிடம் உள்ளது. அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
[5:69]
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
63. அப்போது உங்களிடம் உறுதி-பிரமாணம் எடுக்கின்றோம், நிலையை உங்கள்மேல் உயர்த்துகின்றோம், நீங்கள் உணர்ந்தறிந்து-பண்படும் பொருட்டு, உங்களுக்கு நாம் கொண்டுவருவதை உறுதியுடன் பற்றிக்கொள்ளுங்கள், அதிலுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.
“طُور” (தூர்) எனும் அரபி வார்த்தை – தரம், நிலை, நிலைமை போன்ற அர்த்தங்களிலும் பயன்பாடு உள்ளது. உதாரணமாக (71:14).
ثُمَّ تَوَلَّيْتُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ فَلَوْلَا فَضْلُ ٱللَّـهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلْخَـٰسِرِينَ
64. அங்கு அதன் பின்னர் விலகிவிடுகின்றீர்கள், உங்கள் மீது இறைவனின் கிருபையும், அவனது கருணையும் இல்லாதிருந்தால், நஷ்டமடைந்தோரில் ஒருவராக ஆகிவிடுவீர்கள்.
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ
65. உங்களில் இளைப்பாறுதலில் வரம்புமீறுகின்றார்களே, அவர்களை திடனாக அறிவீர்கள்; பின் அவர்களிடம் கூறுகின்றோம், சிறுமைப்பட்ட குரங்குகளாக ஆகின்றீர்கள்.
فَجَعَلْنَـٰهَا نَكَـٰلًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
66. படிப்பினையாக அதை ஆக்குகின்றோம், அதன் முன்னிடையே உள்ளதையும், அதன் அப்பால் உள்ளதையும். உணர்ந்தறிந்து-பண்படுவோருக்கு அறிவுரையாகவும் உள்ளது.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّـهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةً قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِٱللَّـهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ
67. மூஸா அவரது மக்களிடம் கூறியதாவது – ‘பக்கரத்தை’ தியாகம் செய்யும்படி, நிச்சயமாக இறைவன் உங்களுக்கு கட்டளை இடுகின்றான். கூறினார்கள், எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கின்றீரா? கூறினார், நான் அறிவீனர்களில் ஒருவனாக ஆவதைவிட்டும், இறைவனிடம் அடைக்கலம் தேடுகின்றேன்.
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ فَٱفْعَلُوا۟ مَا تُؤْمَرُونَ
68. கூறினார்கள், எங்களுக்காக உமது பரிபாலனை அழையும், அது எதுவென்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துவான். கூறினார், நிச்சயமாக அவன் கூறுகின்றான், நிச்சயமாக அது ‘பக்கரத்’, கிழடுமில்லை, கன்றுமில்லை, அதற்கிடையே மத்தியமானதாகும்; ஆக உங்களுக்கு ஏவப்படுவதை செய்யுங்கள்.
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
69. கூறினார்கள், எங்களுக்காக உமது பரிபாலனை அழையும், அதன் நிறம் என்னவென்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துவான். கூறினார், நிச்சயமாக அவன் கூறுகின்றான், நிச்சயமாக அது ‘பக்கரத்’, மஞ்சள், அதன் நிறம் பிராகாசமாக உள்ளது, அவதானிப்பவர்களை கவரும்.
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ إِنَّ ٱلْبَقَرَ تَشَـٰبَهَ عَلَيْنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّـهُ لَمُهْتَدُونَ
70. கூறினார்கள், எங்களுக்காக உமது பரிபாலனை அழையும், அது எதுவென்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துவான்; நிச்சயமாக எங்களுக்கு ”பக்கரா’ ஒப்பானாதாக தெரிகின்றது. இறைவன் நாடினால், வழிகாட்டப் பட்டவர்களாக நிச்சயம் ஆவோம்.
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُولٌ تُثِيرُ ٱلْأَرْضَ وَلَا تَسْقِى ٱلْحَرْثَ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيهَا قَالُوا۟ ٱلْـَٔـٰنَ جِئْتَ بِٱلْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُوا۟ يَفْعَلُونَ
71. கூறினார், நிச்சயமாக அவன் கூறுகின்றான், நிச்சயமாக அது ‘பக்கரத்’, பூமியில் தாழ்த்தபடாமல் வளர்க்கப்பட்டது, விளைச்சலுக்கு நீரிறைப்பதற்கும் இல்லை, அதில் வடுபடாமல் அமைதியாக உள்ளது. கூறினார்கள், இப்பதான் சத்தியத்தைக் கொண்டு வந்துள்ளீர். பின் அதை தியாகம் செய்தனர், அவர்கள் கிட்டத்தட்ட செய்பவர்களாக இல்லை.
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَٱدَّٰرَْٰٔتُمْ فِيهَا وَٱللَّـهُ مُخْرِجٌ مَّا كُنتُمْ تَكْتُمُونَ
72. ஆன்மாவை நீங்கள் சாகடிக்கின்ற போது, பின் அஃதில் மூடுகின்றீர்கள், இறைவனோ நீங்கள் மறைத்து வருகின்றதை வெளியாக்குபவன்.
فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَٰلِكَ يُحْىِ ٱللَّـهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
73. ஆக கூறினோம், அஃதன் சிலதைக்கொண்டு அதைத் தட்டுங்கள்; அவ்வாறே மரணித்தவர்களை இறைவன் உயிர்ப்பிக்கின்றான், அவனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கின்றான், நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு.
அஃதன் சிலதைக்கொண்டு (ஆன்மாவின் அல்லது நஃப்ஸின் சிலதைக் கொண்டு)
ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ فَهِىَ كَٱلْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ ٱلْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ ٱلْأَنْهَـٰرُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ ٱلْمَآءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ ٱللَّـهِ وَمَا ٱللَّـهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
74. அங்கு அதன்பின்னர் உங்களின் இதயங்கள் கடினமாகின்றது, கற்பாறையைப் போன்று அல்லது கடும் கடினத்தன்மையாக ஆகின்றது; நிச்சயமாக கற்பாறைகளில் நதிகளானது உதித்தோடுவதும் உள்ளது, நிச்சயமாக அவற்றில் பிளவுப்படுவதும் உள்ளது, பின் அதிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது; நிச்சயமாக அவற்றில், இறைவன்மீதான அச்சத்தால் விழுவதும் உள்ளது. இறைவன் நீங்கள் செயல்படுவதை கவனிக்காமல் இல்லை.
أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَـٰمَ ٱللَّـهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ
75. அவர்கள் உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என ஆவலாக உள்ளீர்களா? திடனாக அவர்களில் ஒரு வகுப்பார் இருக்கின்றர், இறைவனின் வார்த்தையை செவியுறுகின்றனர், அங்கு அதை அவர்கள் புரிந்தபின்னர், அதை மாற்றுகின்றனர், அவர்கள் அறிந்துமுள்ளனர்.
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ قَالُوٓا۟ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّـهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ
76. நம்பிக்கையோடு உள்ளவர்களை சந்திக்கும்போது, கூறுகின்றனர் நாங்களும் நம்புகின்றோம்; அவர்களில் சிலர் சிலரின்பால் தனியாகும்போது கூறுகின்றனர், இறைவன் உங்கள்மீது திறந்துவைத்ததைக் கொண்டு, அவர்களிடம் வெளிப்பட போகின்றீர்களா? அதைக்கொண்டு உங்களது பரிபாலனிடம் உங்களின் வாதங்களுக்காக! நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
a] அரபி ‘حَدِّثُ’ – நிகழ்வு, நிகழ்தல், நிகழ்த்துதல், வெளிப்படல், வெளிப்படுத்துதல்.
b] Related reference – 7:164.
أَوَلَا يَعْلَمُونَ أَنَّ ٱللَّـهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ
77. அவர்கள் மறைக்கின்றதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும், நிச்சயமாக இறைவன் அறிவான் என்பதை, அவர்கள் அறியவில்லையா?
وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ ٱلْكِتَـٰبَ إِلَّآ أَمَانِىَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
78. அவர்களில் பாமரர்களும் உள்ளர். ஆசை எண்ணங்களை தவிர வேதத்தை அறிந்து கொள்பவர்களாக இல்லை, கருதுபவர்களாக அன்றி இல்லை.
فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَـٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَـٰذَا مِنْ عِندِ ٱللَّـهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
79. ஆக அவர்களுக்கு கேடுதான், தங்களது கரங்களைக் கொண்டு வேதத்தை எழுதிக் கொள்கின்றார்கள்; பிறகு கூறுகின்றார்கள் இது இறைவனிடம் இருந்து வந்தது, அதைக்கொண்டு சொற்பவிலையை பரிவர்த்தனை செய்து கொள்கின்றார்கள். அவர்களது கரங்கள் எழுதியதிலும் அவர்களுக்கு கேடுதான், அவர்கள் சம்பாதிப்பதில் இருந்தும் அவர்களுக்கு கேடுதான்.
وَقَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّـهِ عَهْدًا فَلَن يُخْلِفَ ٱللَّـهُ عَهْدَهُۥٓ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّـهِ مَا لَا تَعْلَمُونَ
80. கூறுகின்றார்கள், எண்ணக்கூடிய நாட்களைத் தவிர, நெருப்பு எங்களை தீண்டவே செய்யாது. கூறும், இறைவனிடம் வாக்குறுதி எடுத்துக் கொண்டீர்களா? பின் இறைவன் தனது வாக்குறுதிக்கு மாறுசெய்யவே மாட்டான் அல்லது நீங்கள் அறியாததை இறைவன்மீது கூறுகின்றீர்களா?
بَلَىٰ مَن كَسَبَ سَيِّئَةً وَأَحَـٰطَتْ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
81. மெய்யாதெனில், எவர் தீங்கை சம்பாதித்து, அவரது குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கின்றதோ, அத்தகையோர் நெருப்பின் கூட்டாளிகள்; அதில் அவர்கள் என்றும் ஆகின்றார்கள்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
82. எவர்கள் நம்பிக்கை வைத்தவர்களாக, செயல்களில் சீர்பட்டு வருகின்றார்களோ, அத்தகையோர் தோட்டத்தின் கூட்டாளிகள்; அதில் அவர்கள் என்றும் ஆகின்றார்கள்.
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّـهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَانًا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ
83. இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நாமெடுக்கும் வாக்குறுதியாவது, இறைவனுக்கே தவிர சேவையாற்றாதீர்கள், பெற்றோர்களிடம் நல்லவிதமாக இருக்கவும், நெருக்கமானவர்களிடமும், அனாதைகளிடமும், ஏழைகளிடமும். இன்னும் மனிதர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள், தொடர்பை நிலைநாட்டுங்கள், தூய்மையை கொண்டுவாருங்கள். பிறகு உங்களில் சிலரைத் தவிர புறக்கணிக்கின்றீர்கள். நீங்கள் விலகுகின்றவர்கள்.
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَـٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ
84. இன்னும் உங்களிடம் நாமெடுக்கும் வாக்குறுதியாவது, உங்களது இரத்தங்களைச் சிந்தாதீர்கள், உங்களது ஆன்மாக்களை உங்களது இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். பிறகு உறுதிப்படுத்தினீர்கள், நீங்கள் சாட்சியாகவும் உள்ளீர்கள்.
ثُمَّ أَنتُمْ هَـٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِّنكُم مِّن دِيَـٰرِهِمْ تَظَـٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَإِن يَأْتُوكُمْ أُسَـٰرَىٰ تُفَـٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَـٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ وَمَا ٱللَّـهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
85. பிறகு நீங்கள் இவைகளை உங்களது ஆன்மாக்களை சாகடிக்கின்றீர்கள். உங்களில் ஒரு வகுப்பாரை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுகின்றீர்கள். அவர்கள் மீது பாவத்துடன் வரம்புமீறுவதற்கு துணைப் போகின்றீர்கள். அகதிகளாக உங்களிடம் வருகின்றார்களாயின், அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கின்றீர்கள். அவர்களை வெளியேற்றுவதில் உங்கள்மீது கட்டுப்பாடு உள்ளது. நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி, சிலதை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் அதை செய்வோருக்கான கூலி, இம்மை வாழ்வில் இழிவை தவிர இல்லை. நிலைபெறும் நாளன்று கடுமையான தண்டனையின்பால் திருப்பப் படுவார்கள். இறைவன் நீங்கள் செயல்படுவதை கவனிக்காமல் இல்லை.
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا بِٱلْـَٔاخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ
86. அத்தகைய அவர்கள் மறுமையைவிட்டு, இம்மை வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர். ஆக தண்டனை அவர்களைவிட்டு இலேசாக்க மாட்டாது, அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ
87. மூஸாவிற்கு திடனாக வேதத்தை கொண்டுவந்தோம், அவருக்கு பின்னரும் தூதர்களை தொடரச் செய்தோம். தெளிவானவற்றுடன் மர்யமின் மகன் ஈஸாவை கொண்டு வந்தோம், பரிசுத்த சுவாசத்தால் அவரை வலுவூட்டினோம். உங்களது ஆன்மாக்கள் விரும்பாததை, தூதர் உங்களிடம் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும் பெருமை அடிக்கின்றீர்களே! பின், ஒரு வகுப்பாரை பொய்த்து மறுக்கின்றீர்கள்; மேலும், ஒரு வகுப்பாரை சாகடிக்கின்றீர்கள்.
وَقَالُوا۟ قُلُوبُنَا غُلْفٌۢ بَل لَّعَنَهُمُ ٱللَّـهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ
88. கூறுகின்றார்கள், எங்கள் இதயங்கள் மூடப்பட்டுள்ளது. உண்மையாதெனில், அவர்களின் நிராகரிப்பைக் கொண்டு, இறைவன் அவர்களை சபிக்கின்றான். சொற்பமாகவே நம்பிக்கைக் கொள்கின்றனர்.
وَلَمَّا جَآءَهُمْ كِتَـٰبٌ مِّنْ عِندِ ٱللَّـهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا۟ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُوا۟ كَفَرُوا۟ بِهِۦ فَلَعْنَةُ ٱللَّـهِ عَلَى ٱلْكَـٰفِرِينَ
89. இறைவனிடமிருந்து வேதம் அவர்களிடம் வருகின்றபோது, அவர்களிடம் உள்ளதை தர்மமாக்குவதாக உள்ளது. நிராகரித்தப்படி இருப்பவர்கள்மீது முன்னர் வெற்றிதிறவை தேடியவர்களாக இருந்தனர். பின் அவர்கள் அடையாளம்-அறிபவை அவர்களிடம் வருகின்றபோது அதனை நிராகரிக்கின்றனர். ஆக அந்நிராகரிப்போர் மீது இறைவனின் சாபமுள்ளது.
بِئْسَمَا ٱشْتَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّـهُ بَغْيًا أَن يُنَزِّلَ ٱللَّـهُ مِن فَضْلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ مُّهِينٌ
90. இறைவன் தனது சேவகர்களில் தான் நாடியோர்மீது தனது கிருபையிலிருந்து இறக்கிவைப்பதை பொறாமைபட்டு, இறைவன் இறக்கிவைப்பதை நிராகரித்தவர்களாக, தங்களது ஆன்மாக்களை அதைக்கொண்டு அவர்கள் மாற்றிக்கொள்வது, எவ்வளவு கெட்டது! ஆக கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகின்றார்கள். அந்நிராகரிப்போருக்கு இழிவான தண்டனையுள்ளது.
وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّـهُ قَالُوا۟ نُؤْمِنُ بِمَآ أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّـهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ
91. இறைவன் இறக்கிவைப்பதுடன் நம்பிக்கை கொள்ளுங்கள் என அவர்களிடம் கூறும்போது கூறுகின்றனர், எங்கள்மீது இறக்கியதன் மீதே நம்பிக்கை கொள்வோம். அதன் பின்னுள்ளதை நிராகரிக்கின்றனர், அதுவோ அவர்களிடம் உள்ளதை தர்மமாக்குகின்ற சத்தியம். கூறும், நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், எதற்காக இறைவனின் நபிமார்களை முன்னர் சாகடித்தீர்கள்.
وَلَقَدْ جَآءَكُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَـٰتِ ثُمَّ ٱتَّخَذْتُمُ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِهِۦ وَأَنتُمْ ظَـٰلِمُونَ
92. திடனாக தெளிவானவற்றுடன் மூஸா உங்களிடம் வந்தார். அங்கு அதன்பின்னர் அவசரத்தனத்தையே எடுக்கின்றீர்கள், நீங்கள் கலகக்காரர்களே.
The Arabic word “عِجْلَ” does have the meaning of “haste” in addition to “calf.” This meaning is derived from the fact that calves are often associated with speed and agility.
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱسْمَعُوا۟ قَالُوا۟ سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِۦٓ إِيمَـٰنُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
93. உங்களிடம் நாமெடுக்கும் வாக்குறுதியாவது, உங்கள்மேல் நிலையை உயர்த்தினோம், உங்களுக்கு நாம் கொண்டுவருவதை உறுதியுடன் பற்றிக்கொள்ளுங்கள், செவிமடுங்கள். அவர்களின் கூற்று, செவியுறுகின்றோம், மாறாகவும் உள்ளோம். அவர்களின் நிராகரிப்பைக் கொண்டு, அவசரத்தனத்தை தங்களது இதயங்களில் புகட்டிக்கொண்டனர். கூறும், நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், எதைக்கொண்டு உங்களின் காரியமுள்ளதோ, அது உங்களின் நம்பிக்கைக்கு மிகக்கெட்டது.
The Arabic word “عِجْلَ” does have the meaning of “haste” in addition to “calf.” This meaning is derived from the fact that calves are often associated with speed and agility.
قُلْ إِن كَانَتْ لَكُمُ ٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ عِندَ ٱللَّـهِ خَالِصَةً مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
94. கூறும், மற்ற மனிதர்களைவிட, பிரத்தியேகமாக இறைவனிடமுள்ள மறுமைவீடு, உங்களுக்கே இருக்கின்றது எனில், மரணத்தை விருப்பமாக்குங்கள், நீங்கள் தர்மவான்களாக இருப்பின்.
وَلَن يَتَمَنَّوْهُ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَٱللَّـهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ
95. அவர்களது கரங்கள் முற்படுத்தியதைக் கொண்டு ஒருபோதும் அதை விரும்பமாட்டார்கள். இறைவன் அக்கிரமக்காரர்களுடன் அறிந்தவனாக உள்ளான்.
وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٍ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِۦ مِنَ ٱلْعَذَابِ أَن يُعَمَّرَ وَٱللَّـهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ
96. வாழ்க்கையின்மீது பேராசையுள்ள மனிதர்களாக அவர்களை நிச்சயம் கண்டுகொள்வீர், இணை வைக்கின்றார்களே அவர்களிலும். நேசப்படி அவர்களில் ஒருவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயுட்காலம் இருந்தாலும், தண்டனையில் இருந்து அவனை அகற்றக்கூடிய ஆயுட்காலமாக அது இருக்காது. அவர்கள் செயல்படுவதுடன் இறைவன் பார்த்தவனாக உள்ளான்.
قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ ٱللَّـهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ
97. கூறும், எவன் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ, நிச்சயமாக அவர்தான் இறைவனின் அனுமதியைக் கொண்டு, உமது இதயத்தின்மீது அதை இறக்கிவைக்கின்றார். அதன் முன்னிடையே உள்ளதை தர்மமாக்குவதாகவும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது.
[16:102]
مَن كَانَ عَدُوًّا لِّلَّـهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبْرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّـهَ عَدُوٌّ لِّلْكَـٰفِرِينَ
98. எவன் இறைவனுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதுகளுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் விரோதியாக இருக்கின்றானோ, நிச்சயமாக இறைவன் நிராகரிப்பவர்களுக்கு விரோதியாக உள்ளான்.
وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكَ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ وَمَا يَكْفُرُ بِهَآ إِلَّا ٱلْفَـٰسِقُونَ
99. திடனாக தெளிவான அத்தாட்சிகளை உம்மீது இறக்கி வைக்கின்றோம். கலகக்காரர்களைத் தவிர அதனை நிராகரிப்பது இல்லை.
أَوَكُلَّمَا عَـٰهَدُوا۟ عَهْدًا نَّبَذَهُۥ فَرِيقٌ مِّنْهُم بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ
100. வாக்குறுதியை அவர்கள் வாக்களிக்கும் ஒவ்வொரு முறையும், அவர்களில் ஒரு வகுப்பார் அதை உதாசனம் செய்கின்றரா? உண்மையாதெனில், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
وَلَمَّا جَآءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ ٱللَّـهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ كِتَـٰبَ ٱللَّـهِ وَرَآءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ
101. அவர்களிடம் உள்ளதை தர்மமாக்குவதாக இறைவனிடமிருந்து தூது அவர்களிடம் வருகின்றபோது, வேதம் கொடுக்கப் பட்டவர்களில் ஒரு வகுப்பார் உதாசனம் செய்கின்றர். நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களைப் போன்று இறைவனின் வேதத்தை, தங்களது முதுகுக்குப் பின்னால் ஆக்குகின்றர்.
وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَـٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَـٰنَ وَمَا كَفَرَ سُلَيْمَـٰنُ وَلَـٰكِنَّ ٱلشَّيَـٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَـٰرُوتَ وَمَـٰرُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّـهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
102. ஸுலைமானின் ஆட்சியின்மீது தீயோர்கள் ஓதியதை பின்பற்றுகின்றார்கள். ஸுலைமானோ நிராகரிப்பவர் அல்ல. எனினும் தீயோர்கள் நிராகரிப்பவர்களே. மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்கின்றனர், பாபிலில் ஹாரூத் மற்றும் மாரூத் என்ற இரு வானவர்கள்மீது இறக்கப்பட்டதையும். நிச்சயமாக நாங்கள் சோதனையில் உள்ளோம், ஆக நிராகரிக்க வேண்டாம் எனக் கூறும்வரை, எவர் ஒருவருக்கும் அவ்விருவரும் கற்றுக்கொடுக்க இல்லை. பின் ஒருவருக்கும் அவரது துணைக்கும் இடையே அதைக்கொண்டு பாகுபாடு உண்டாக்குவதை அவ்விருவரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். இறைவனின் அனுமதியின்றி எவர் ஒருவருக்கும் அவர்கள் தீங்கிழைத்திட முடியாது. தங்களுக்கு தீங்கிழைப்பதையும் தங்களுக்கு பலனில்லாததையுமே கற்றுக் கொள்கின்றனர். அதை பரிவர்த்தனை செய்வோருக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை என்பதை திடனாக அறிபவர்களே. அறிபவர்களாக அவர்கள் இருக்கையில், தங்களது ஆன்மாக்களை அதைக்கொண்டு அவர்கள் மாற்றிக்கொள்வது, எவ்வளவு கெட்டது!
وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَمَثُوبَةٌ مِّنْ عِندِ ٱللَّـهِ خَيْرٌ لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ
103. அவர்கள் அறிந்துவருகையில், நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை வைத்தவர்களாக பண்படுவார்களாயின், இறைவனிடம் இருந்துள்ள வெகுமதி சிறப்பாக ஆகின்றது.
[16:102]
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقُولُوا۟ رَٰعِنَا وَقُولُوا۟ ٱنظُرْنَا وَٱسْمَعُوا۟ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
104. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! எங்களை மேய்க்கவும் எனக் கூறாதீர்கள், எங்களை அவதானிக்கவும் எனக் கூறுங்கள், இன்னும் செவிமடுங்கள். நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனையுள்ளது.
அரபியில் “رَٰعِ” என்ற வார்த்தையானது சூழலைப் பொறுத்து “மேய்ப்பவர், பாதுகாவலர், தலைவர்(Leader) அல்லது “பார்த்துக்கொள்பவர்” போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ وَلَا ٱلْمُشْرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيْكُم مِّنْ خَيْرٍ مِّن رَّبِّكُمْ وَٱللَّـهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ وَٱللَّـهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
105. உங்கள் பரிபாலனிடம் இருந்து சிறப்பானவை உங்கள்மீது இறக்கப்படுவதை, வேதத்தின் குடும்பத்தாரில் நிராகரித்தபடி உள்ளவர்கள் விரும்புவதில்லை, இணைவைப்பவர்களும் இல்லை. இறைவன் தான் நாடியோரை, தனது கருணையைக் கொண்டு தேர்ந்தெடுக்கின்றான். இறைவன் கிருபையுடையவன் மகத்தானவன்.
مَا نَنسَخْ مِنْ ءَايَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَآ أَوْ مِثْلِهَآ أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّـهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
106. அத்தாட்சிகளில் எதையும் நாம் நீக்கினாலோ அல்லது அதனை நாம் மறக்கச் செய்தாலோ, அதைவிட சிறப்பானதையோ அல்லது அது போன்றதையோ கொண்டுவருவோம். அறிந்துகொள்ள வில்லையா! நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு விடயத்தின்மீதும் அளவிடுபவன்.
أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّـهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّـهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ
107. அறிந்துகொள்ள வில்லையா! வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி, நிச்சயமாக இறைவன் அவனிடமே. இறைவனை விடுத்துவிட்டு யாதொரு பாதுகாப்பும் உங்களுக்கு இல்லை, உதவியுமில்லை.
أَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ وَمَن يَتَبَدَّلِ ٱلْكُفْرَ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
108. அல்லது முன்னர் மூஸாவை கேள்விகேட்டது போன்று உங்கள் தூதை நீங்கள் கேள்விகேட்க விரும்புகின்றீர்களா? எவன் நம்பிக்கையானதை நிராகரிப்பால் மாற்றுகின்றானோ, திடனாக சீரான வழியை தவறவிடுகின்றான்.
وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَـٰنِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّـهُ بِأَمْرِهِۦٓ إِنَّ ٱللَّـهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
109. வேதத்தின் குடும்பத்தார்களில் பெரும்பாலோர் விரும்பி, நீங்கள் நம்பகம்பெற்ற பின்னர் நிராகரிப்பவர்களாக உங்களை திருப்பி விடுகின்றார்கள் எனில், சத்தியம் அவர்களுக்கு தெளிவான பின்னரும், அவர்களின் ஆன்மாக்குள் உள்ள பொறாமையாகும். ஆக, இறைவன் தனது காரியத்தை கொண்டுவரும் வரை, சகித்துக் கொள்ளுங்கள், பொறுத்தும் கொள்ளுங்கள். நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு விடயத்தின்மீதும் அளவிடுபவன்.
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّـهِ إِنَّ ٱللَّـهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
110. தொடர்பையும் நிலைநாட்டுங்கள், தூய்மையையும் கொண்டுவாருங்கள்; சிறப்பானதில் இருந்து உங்களின் ஆன்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்துகின்ற எதுவாயினும், இறைவனிடம் அதைக் கண்டுக்கொள்வீர்கள். நிச்சயமாக இறைவன் நீங்கள் செயல்படுவதுடன் பார்த்தவனாக உள்ளான்.
وَقَالُوا۟ لَن يَدْخُلَ ٱلْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَـٰرَىٰ تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا۟ بُرْهَـٰنَكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
111. கூறுகின்றனர், ஹூதுக்கள் அல்லது நசாராக்களாக இருப்போரை தவிர தோட்டத்தில் பிரவேசிக்கவே முடியாது. இது அவர்களின் விருப்பம். கூறும், நீங்கள் தர்மவான்களாக இருப்பின், உங்களின் சான்றை சமர்ப்பியுங்கள்.
بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
112. மெய்யாதெனில், எவர் இறைவனிடம் அவரது முகத்தை சமாதானபடுத்தி நலம்புரிபவராகவும் உள்ளாரோ, அவருக்கு அவரது பரிபாலனிடம் அவருக்கான வெகுமதியுள்ளது. அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
وَقَالَتِ ٱلْيَهُودُ لَيْسَتِ ٱلنَّصَـٰرَىٰ عَلَىٰ شَىْءٍ وَقَالَتِ ٱلنَّصَـٰرَىٰ لَيْسَتِ ٱلْيَهُودُ عَلَىٰ شَىْءٍ وَهُمْ يَتْلُونَ ٱلْكِتَـٰبَ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَٱللَّـهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
113. ஹூதுக்கள் கூறுவது நசாராக்கள் ஒரு விடயத்தின்மீதும் இல்லை. நசாராக்கள் கூறுவது ஹூதுக்கள் ஒரு விடயத்தின்மீதும் இல்லை. அவர்கள் வேதத்தையும் ஒதுகின்றனர். அவ்வாறே அவர்கள் கூறுவது போன்றே, அறியாதுள்ளோரும் கூறுகின்றர். எதில் அவர்கள் முரண்பட்டு இருக்கின்றார்களோ, அதில் நிலைபெறும் நாளன்று, இறைவன் அவர்களிடையே ஞான-தீர்வளிப்பான்.
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَـٰجِدَ ٱللَّـهِ أَن يُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ وَسَعَىٰ فِى خَرَابِهَآ أُو۟لَـٰٓئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَآ إِلَّا خَآئِفِينَ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
114. இறைவனின் மரியாதைக்குரியதை அதில் அவனது பண்பை நினைவுகூர்வதை விட்டும் தடுப்பவனைவிட அக்கிரமக்காரன் யார்? அதை பாழாக்குவதில் முயல்கின்றான், அத்தகைய அவர்களுக்கு இருப்பது என்ன? பயந்தவர்களாக அன்றி அதில் அவர்கள் பிரவேசிப்பதற்கு இல்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுதான், அவர்களுக்கு மறுமையில் பெரும் தண்டனையும் உள்ளது.
وَلِلَّـهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا۟ فَثَمَّ وَجْهُ ٱللَّـهِ إِنَّ ٱللَّـهَ وَٰسِعٌ عَلِيمٌ
115. கிழக்கும், மேற்கும் இறைவனிடமே. நீங்கள் எங்கு திரும்பினாலும், அங்கு இறைவனின் முகமுள்ளது. நிச்சயமாக இறைவன் விசாலமானவன் அறிந்தவன்.
وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّـهُ وَلَدًا سُبْحَـٰنَهُۥ بَل لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ كُلٌّ لَّهُۥ قَـٰنِتُونَ
116. கூறுகின்றனர், இறைவன் குமாரனை எடுத்துக் கொண்டான். அவன் மகிமையானவன். உண்மையாதெனில், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள யாவும் அவனிடமே. ஒவ்வொன்றும் அவனுக்கே கீழ்படிகின்றது.
بَدِيعُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
117. வானங்கள் மற்றும் பூமியை உண்டாக்கியவன். ஒரு காரியத்தை முடிவுசெய்யும் போது, நிச்சயமாக அவன் கூறுவதெல்லாம், ஆகுக, பின் ஆகிவிடுகின்றது.
وَقَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّـهُ أَوْ تَأْتِينَآ ءَايَةٌ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ تَشَـٰبَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يُوقِنُونَ
118. அறியாதுள்ளவர்கள் கூறுகின்றார்கள், இறைவன் நம்மிடம் பேசுவதோ அல்லது அத்தாட்சியை நமக்கு கொண்டுவருவதோ இல்லையே ஏன்? இவ்வாறே இவர்கள் கூறுவது போன்றே, இவர்களுக்கு முன்னிருந்தோரும் கூறினர். அவர்களின் இதயங்களுக்கு ஒப்பாகவுள்ளது. உறுதிகொள்கின்ற மக்களுக்கு, திடனாக அத்தாட்சிகளை தெளிவுபடுத்துகின்றோம்.
إِنَّآ أَرْسَلْنَـٰكَ بِٱلْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْـَٔلُ عَنْ أَصْحَـٰبِ ٱلْجَحِيمِ
119. நிச்சயமாக நாம் சத்தியத்தைக் கொண்டு உம்மை அனுப்புகின்றோம், நற்செய்தியாகவும் எச்சரிக்கையாகவும். நரகத்தின் கூட்டாளிகள் பற்றி வினவப்பட மாட்டீர்.
وَلَن تَرْضَىٰ عَنكَ ٱلْيَهُودُ وَلَا ٱلنَّصَـٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى ٱللَّـهِ هُوَ ٱلْهُدَىٰ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ ٱلَّذِى جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّـهِ مِن وَلِىٍّۢ وَلَا نَصِيرٍ
120. ஹூதுக்கள் உம்மிடம் திருப்தியடையவே மாட்டார்கள், நசாராக்களும் மாட்டார்கள், அவர்களின் வழிமுறையை நீ பின்பற்றும்வரை. கூறும், நிச்சயமாக இறைவனின் வழிகாட்டுதல் அதுவே வழிகாட்டுதலாகும். அறிவானது உமக்கு வந்த பின்பும், அவர்களது ஆசைகளை பின்பற்றுவீராயின், யாதொரு பாதுகாப்பும் இறைவனிடமிருந்து உமக்கு இல்லை, உதவியுமில்லை.
ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُو۟لَـٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ وَمَن يَكْفُرْ بِهِۦ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
121. எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ, அவர்கள் அதனை ஓதுகின்றார்கள், அதன் ஓதுதலின் சத்தியத்தை. அத்தகையோரே அதனுடன் நம்பிக்கைக் கொள்பவர்கள். யார் அதனை நிராகரிக்கின்றரோ, அத்தகைய அவர்கள் நஷ்டவாளிகளே.
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
122. ஓ இஸ்ராயீலின் சந்ததியினரே! உங்கள் மீது நான் அருளியுள்ள எனது அருட்கொடையை நினைவுகூருங்கள்; அகிலத்தாருக்கு மேலாக நிச்சயமாக நான் உங்களுக்கு கிருபை புரிந்துள்ளேன்.
وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَـٰعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ
123. ஒரு நாளை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். ஒரு ஆன்மா ஒரு ஆன்மாவிற்கு ஒரு விடயத்திலும் வெகுமதியளிக்காது, இழப்பீடும் அதனிடமிருந்து ஏற்கப்பட மாட்டாது, பரிந்துரையும் அதற்கு பயனளிக்காது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَإِذِ ٱبْتَلَىٰٓ إِبْرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَـٰتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِى قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّـٰلِمِينَ
124. இப்ராஹீமை அவரது பரிபாலனன், வார்த்தைகளைக் கொண்டு பரீட்சித்த போது, அவற்றை முழுமைப் படுத்தினார். கூறினான், நிச்சயமாக உம்மை மனிதர்களுக்கு முன்னோடியாக ஆக்குகின்றேன். கூறினார், எனது சந்ததியில் இருந்துமா? கூறினான், அக்கிரமக்காரர்களை எனது வாக்கு சேராது.
وَإِذْ جَعَلْنَا ٱلْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَٱتَّخِذُوا۟ مِن مَّقَامِ إِبْرَٰهِـۧمَ مُصَلًّى وَعَهِدْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ أَن طَهِّرَا بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْعَـٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
125. மனிதர்களுக்கு வீட்டை சன்மானமாகவும், நம்பகமாகவும் நாம் ஆக்கும்போது, தொடர்புடைய இப்ராஹிமின் நிலைப்பாட்டிலிருந்து எடுத்து கொள்ளுங்கள். இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீலிடம் உடன்படிக்கை செய்தோம், சுற்றத்தாருக்காக எனது வீட்டை தூய்மையாக்குங்கள், தங்குவோருக்கும், பணிவுகளுக்கும், மரியாதைகளுக்கும்.
وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ وَبِئْسَ ٱلْمَصِيرُ
126. அப்போது இப்ராஹீம் கூறினார், பரிபாலனே! இந்த நிலத்தை நம்பகமாக ஆக்குவாயாக, அவர்களில் இறைவனைக் கொண்டு மறுமை நாளை நம்பியுள்ள அதன் குடும்பங்களுக்கும், கனிவர்க்கங்களில் இருந்து வாழ்வாதாரம் வழங்குவாயாக. கூறினான், நிராகரிப்பில் உள்ளவனையும் சற்று சுகிக்கச் செய்வேன், பிறகு நெருப்பின் தண்டனையின்பால் அவனை நிர்பந்திப்பேன், சேருமிடம் மிகக்கெட்டது.
وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِـۧمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَـٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
127. அவ்வீட்டில் அஸ்திவாரத்தை இப்ராஹீம் உயர்த்துகின்ற போது இஸ்மாயிலும், எங்கள் பரிபாலனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீ நீயே செவியேற்பவன் நன்கறிந்தவன்.
رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
128. எங்கள் பரிபாலனே! உம்மிடம் சமாதானம் பெற்றவர்களாக எங்களை ஆக்குவாயாக. எங்கள் சந்ததிகளில் இருந்தும் உம்மிடம் சமாதானம் பெறும் சமூகமாக. எங்களது செயல்பாடுகளை எங்களுக்கு காண்பிப்பாயாக. எங்கள்மீது மீட்சியையும். நிச்சயமாக நீ நீயே மீட்சியளிப்பவன் மிக்க-கருணையாளன்.
رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
129. எங்கள் பரிபாலனே! அவர்களிடமிருந்து தூதை அவர்களில் எழுப்புவாயாக. அத்தாட்சிகளை அவர்கள்மீது ஓதிக்காட்ட. வேதத்தையும், ஞான-தீர்வையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க. இன்னும் அவர்களை தூய்மையாக்க. நிச்சயமாக நீ நீயே மிகைத்தோன் ஞானமிக்கவன்.
وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُۥ وَلَقَدِ ٱصْطَفَيْنَـٰهُ فِى ٱلدُّنْيَا وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ
130. தனது ஆன்மாவை மடமை ஆக்குவோனை தவிர, இப்ராஹீமின் வழிமுறையை விட்டு தேர்வுசெய்வோன் யார்? திடனாக இம்மையில் அவரை தேர்ந்தெடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் சீர்பட்டோர்களில் ஆகின்றார்.
إِذْ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
131. அவரது பரிபாலனன் அவரிடம் கூறியதாவது, சமாதானமடையும். கூறினார், அகிலங்களை பரிபாலிப்பவனிடம் சமாதானம் பெறுகின்றேன்.
وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّـهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
132. இப்ராஹீம் தனது குமாரர்களுக்கும் அதைக்கொண்டே போதித்தார்; யஃகூபும், ஓ எனது குமாரர்களே! நிச்சயமாக இறைவன் உங்களுக்கு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் சமாதானம் பெற்றவர்களாக அன்றி, நிச்சயமாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்.
أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَـٰهَكَ وَإِلَـٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ إِلَـٰهًا وَٰحِدًا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
133. அல்லது யஃகூபை மரணம் நெருங்கியபோது சாட்சியாக இருந்தீரா? அப்போது தனது குமாரர்களிடம் கூறினார், எனக்கு பின்னர் எதற்கு சேவையாற்றுவீர்கள்? கூறினார்கள், உமது இறைவனையே உமது மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கின் இறைவனான ஏக இறைவனையே; நாங்கள் அவனிடமே சமாதானம் பெறுபவர்கள்.
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُو
134. இந்த சமுதாயம் திடனாக சென்றுவிட்டது; அது சம்பாதித்தவை அதற்கு, நீங்கள் சம்பாதிப்பவை உங்களுக்கு, அவர்கள் செயல்பட்டு வந்தவை குறித்து வினவப்பட மாட்டீர்கள்.
وَقَالُوا۟ كُونُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ تَهْتَدُوا۟ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَٰهِـۧمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
135. கூறுகின்றார்கள் ஹூதுக்கள் அல்லது நசாராக்களாக ஆகுங்கள் வழிகாட்டப் படுவீரகள். கூறும், உண்மையாதெனில் இணைவைப்போரில் இல்லாதிருக்கும், நேர்மையான இப்ராஹீமின் வழிமுறையையே.
قُولُوٓا۟ ءَامَنَّا بِٱللَّـهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِىَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
136. கூறுங்கள், இறைவனுடன் எங்களுக்கு இறக்கப்படுவதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் மற்றும் வழித்தோன்றல்களுக்கு இறக்கப்பட்டதையும், மூஸா மற்றும் ஈஸாவுக்கு கொடுக்கப்பட்டதையும், இன்னும் நபிமார்களுக்கு அவர்களது பரிபாலனிடம் இருந்து கொடுக்கப்படுவதையும் நம்பிக்கை கொள்கின்றோம்; அவர்களில் ஒருவர் இடையேயும் பாகுபாடு செய்யமாட்டோம். நாங்கள் அவனிடமே சமாதானம் பெறுபவர்கள்.
فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّـهُ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
137. எதனைக் கொண்டு நம்பிக்கை கொள்கின்றீர்களோ, அதனை உதாரணமாகக் கொண்டு நம்பிக்கை கொள்வார்களாயின், திடனாக வழிகாட்டப்படுவார்கள். புறக்கணிப்பார்களாயின், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் உள்ளர். இறைவன் விரைவில் அவர்களுக்கு உம்மை நிறைவாக்குவான். அவன் நன்கு-செவியுறுபவன் நன்கறிந்தவன்.
صِبْغَةَ ٱللَّـهِ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّـهِ صِبْغَةً وَنَحْنُ لَهُۥ عَـٰبِدُونَ
138. இறைவனின் வர்ணம், வர்ணம் கொடுப்பதில் இறைவனை விட சிறந்தவன் யார்? நாங்கள் அவனுக்கே சேவையாற்றுபவர்கள்.
قُلْ أَتُحَآجُّونَنَا فِى ٱللَّـهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ وَنَحْنُ لَهُۥ مُخْلِصُونَ
139. கூறும், இறைவனைப் பற்றி எங்களிடம் வாதிடுகின்றீர்களா? அவனே எங்களின் பரிபாலனும், உங்களின் பரிபாலனும். எங்களுக்கு எங்களது செயல்கள், உங்களுக்கு உங்களது செயல்கள். நாங்கள் அவனுக்கே நேர்மையானவர்கள்.
أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطَ كَانُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ قُلْ ءَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّـهُ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَـٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّـهِ وَمَا ٱللَّـهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
140. அல்லது இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூப் மற்றும் வழித்தோன்றல்களும் நிச்சயமாக ஹூதுக்களாக அல்லது நசாராக்களாக இருக்கின்றனர் என கூறுகின்றீர்களா? கூறும், அறிந்திருப்பது நீங்களா அல்லது இறைவனா? இறைவனிடம் இருந்து தன்னிடமுள்ள சாட்சியத்தை மறைப்பவனைவிட அக்கிரமக்காரன் யார்? இறைவன் நீங்கள் செயல்படுவதை கவனிக்காமல் இல்லை.
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ
141. இந்த சமுதாயம் திடனாக சென்றுவிட்டது; அது சம்பாதித்தவை அதற்கு, நீங்கள் சம்பாதிப்பவை உங்களுக்கு, அவர்கள் செயல்பட்டு வந்தவை குறித்து வினவப்பட மாட்டீர்கள்.
سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا قُل لِّلَّـهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
142. மனிதர்களில் மூடர்கள் விரைவாக கூறுவது, அவர்கள் எதன்மீது இருந்தார்களோ, அந்த முன்னோக்கத்தை விட்டும், அவர்களை திருப்பியது எது? கூறும், கிழக்கும் மேற்கும் இறைவனுக்கே. தான் நாடியோரை நேர்நிலையான பாதையின்பால் வழிநடத்துகின்றான்.
وَكَذَٰلِكَ جَعَلْنَـٰكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا ٱلْقِبْلَةَ ٱلَّتِى كُنتَ عَلَيْهَآ إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّـهُ وَمَا كَانَ ٱللَّـهُ لِيُضِيعَ إِيمَـٰنَكُمْ إِنَّ ٱللَّـهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
143. அவ்வாறே, ஒரு நடுநிலையான சமுதாயமாக, உங்களை ஆக்குகின்றோம். மனிதர்கள்மீது நீங்கள் சாட்சியாக இருப்பதற்காக, உங்கள்மீது தூது சாட்சியாக இருக்கின்றது. எதன்மீது இருக்கின்றீர்களோ அந்த முன்னோக்கம், தூதை பின்பற்றுவோர் யார்?, தனது இரு குதிகால்களின் மீது திரும்பிவிடுவோர் யார்?, என்பதை நாம் அறிவதற்காகவே அன்றி நாம் ஆக்கவில்லை. அது இறைவனின் வழிகாட்டுதலில் உள்ளோருக்கே தவிர பெரியதொன்றாக இருக்கின்றது. உங்களின் நம்பிக்கையை வீணாக்குபவனாக இறைவன் இருக்கவில்லை. நிச்சயமாக இறைவன் மனிதர்களுடன் அன்பாக கருணையாக உள்ளான்.
“Wasatan” நடு (naḍu – middle), மித (miduthi – moderate), நியாயம் (niyāyam – fairness), சமநிலை (samanilai – balance), or இடை (idai – intermediary).
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَىٰهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ وَمَا ٱللَّـهُ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ
144. திடனாக, உமது முகம் வானத்தின்பால் முன்னோக்குவதை காண்கின்றோம். பின் உமக்கு திருப்தியானதில் உமது முன்னோக்கத்தை, நிச்சயமாக திருப்புகின்றோம். ஆக கட்டுப்பாடான மரியாதைக்குரியதின் பக்கம் உமது முகத்தை திருப்பிக்கொள்வீராக; நீங்களும் எங்கிருந்தாலும், அதன்பக்கமே உங்கள் முகங்களை திருப்பிக் கொள்வீர்களாக; நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள், நிச்சயமாக அது, உமது பரிபாலனிடம் இருந்துள்ள சத்தியம் என்பதை அறிந்துகொள்வார்கள்; அவர்கள் செயல்படுவதையும் இறைவன் கவனிக்காமல் இல்லை.
وَلَئِنْ أَتَيْتَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ بِكُلِّ ءَايَةٍ مَّا تَبِعُوا۟ قِبْلَتَكَ وَمَآ أَنتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُم بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم مِّنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ إِنَّكَ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
145. ஒவ்வொரு அத்தாட்சிகளையும், வேதம் கொடுக்கப் பட்டவர்களிடம் நீ கொண்டுவந்தாலும், உமது முன்னோக்கத்தை பின்பற்ற மாட்டார்கள்; நீயும் அவர்களின் முன்னோக்கத்தை பின்பற்றுவோர் அல்ல; அவர்களில் சிலர் சிலரின் முன்னோக்கத்தை பின்பற்றுவோர் அல்ல. அறிவானது உமக்கு வந்தபின்னரும், அவர்களின் ஆசைகளை பின்பற்றுவீராயின், அப்போது நிச்சயமாக நீ அக்கிரமக்காரர்களில் ஆகின்றீர்.
ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
146. எவர்களுக்கு வேதம் கொடுத்துள்ளோமோ, அவர்கள் தங்களின் பிள்ளைகளை கண்டறிவதைப் போன்று, அதை கண்டறிந்து கொள்வார்கள். நிச்சயமாக அவர்களில் ஒரு வகுப்பார், சத்தியத்தை அவர்கள் அறிந்திருந்தும் மறைப்பவர்கள் உள்ளர்.
ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ
147. உமது பரிபாலனிடம் இருந்துளள சத்தியமாகும். ஆக சந்தேகிப்போரில் ஒருவராய் நிச்சயம் ஆகிடவேண்டாம்.
وَلِكُلٍّۢ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّـهُ جَمِيعًا إِنَّ ٱللَّـهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
148. ஒவ்வொருவருக்கும் ஒரு முகநோக்கு உள்ளது, அவன் அதன் பாதுகாவலன். ஆக நன்மைகளால் முந்துங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும், ஒருசேர இறைவன் உங்களை கொண்டுவருவான். நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு விடயத்தின்மீதும் அளவிடுபவன்.
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِنَّهُۥ لَلْحَقُّ مِن رَّبِّكَ وَمَا ٱللَّـهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
149. நீ எங்கு சென்றாலும், கட்டுப்பாடான மரியாதைக்குரியதின் பக்கம், உமது முகத்தை திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக அது உமது பரிபாலனிடம் இருந்துள்ள சத்தியமாகும். இறைவன் நீங்கள் செயல்படுவதை கவனிக்காமல் இல்லை.
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
150. நீ எங்கு சென்றாலும், கட்டுப்பாடான மரியாதைக்குரியதின் பக்கம், உமது முகத்தை திருப்பிக்கொள்வீராக. நீங்களும் எங்கிருந்தாலும், அதன்பக்கமே உங்கள் முகங்களை திருப்பிக் கொள்வீர்களாக; அவர்களில் அக்கிரமமாக உள்ளவர்களை தவிர, உங்கள்மீது வாதம்புரிய மனிதர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆக அவர்களை அஞ்சாதீர்கள், என்னையே அஞ்சுங்கள், எனது அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கவும், நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டும்.
كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَـٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ
151. அவ்வாறே உங்களிடமிருந்து தூதை உங்களில் அனுப்புகின்றோம். நமது அத்தாட்சிகளை உங்கள்மீது ஓதிக் காண்பிக்கின்றது, உங்களை தூய்மைப் படுத்துகின்றது, வேதத்தையும் ஞானதீர்வையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது, நீங்கள் அறியாமலே இருந்தவற்றையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது.
فَٱذْكُرُونِىٓ أَذْكُرْكُمْ وَٱشْكُرُوا۟ لِى وَلَا تَكْفُرُونِ
152. ஆக என்னை நினைவில் கொள்ளுங்கள், உங்களை நினைவில் கொள்கின்றேன். எனக்கு நன்றியோடு இருங்கள். என்னை நிராகரிக்காதீர்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ إِنَّ ٱللَّـهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ
153. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! நிதானம் மற்றும் தொடர்பைக் கொண்டு உதவிதேடுங்கள்; நிச்சயமாக நிதானம் உள்ளவர்களுடன் இறைவன் உள்ளான்.
وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّـهِ أَمْوَٰتٌۢ بَلْ أَحْيَآءٌ وَلَـٰكِن لَّا تَشْعُرُونَ
154. இறைவனின் வழியில் கொல்லப்பட்டோரை, மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். உண்மையாதெனில், வாழ்கின்றார்கள். எனினும், உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.
وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِينَ
155. பயம் மற்றும் பசியின் விடயத்தைக் கொண்டும், மேலும் செல்வங்கள், ஆன்மாக்கள் மற்றும் கனிமங்களின் இழப்புகளாலும் உங்களை நிச்சயமாக பரீட்சிக்கின்றோம். நிதானம்-பேணுவோருக்கு நற்செய்தி அளிப்பீராக.
ٱلَّذِينَ إِذَآ أَصَـٰبَتْهُم مُّصِيبَةٌ قَالُوٓا۟ إِنَّا لِلَّـهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ
156. வீழ்ச்சியானது தங்களிடம் விழும்போது, அவர்கள் கூறுகின்றார்கள், நிச்சயமாக நாம் இறைவனிடமே, நிச்சயமாக நாம் அவன்பாலே திரும்புபவர்கள்.
أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ
157. அத்தகைய அவர்கள்மீது அவர்களின் பரிபாலனிடம் இருந்து தொடர்புகள் உள்ளது, இன்னும் கருணையும்; அத்தகைய அவர்களே வழிகாட்டுதலில் உள்ளவர்கள்.
إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّـهِ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّـهَ شَاكِرٌ عَلِيمٌ
158. நிச்சயமாக தெளிவும் தைரியமும் இறைவனின் அறிகுறிகளில் உள்ளதாகும். ஆக, இருப்பின் வாதம் அல்லது ஆயுளில், அவ்விரண்டுடன் வலம்வருவது அவர்மீது குற்றமில்லை. எவர் நல்லவிதமாக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக இறைவன் – நன்றியாளன், அறிந்தவன்.
நிச்சயமாக சஃபா மற்றும் மர்வா இறைவனின் அறிகுறிகளில் உள்ளதாகும். ஆக வீட்டின் ஹஜ் அல்லது உம்ராவில், அவ்விரண்டுடன் வலம்வருவது அவர்மீது குற்றமில்லை. இன்னும் எவர் நல்லவிதமாக கட்டுப்பட்டு நடக்கின்றாரோ, நிச்சயமாக இறைவன் நன்றியாளன் அறிந்தவன்.
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَـٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّـٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَـٰبِ أُو۟لَـٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّـهُ وَيَلْعَنُهُمُ ٱللَّـٰعِنُونَ
159. தெளிவானவற்றில் இருந்து நாம் இறக்கிவைப்பதை, மேலும் வேதத்தில் மனிதர்களுக்கு அதனை நாம் தெளிவாக்கிய பின்னர், அவ்வழிகாட்டுதலை நிச்சயமாக எவர்கள் மறைக்கின்றார்களோ, அத்தகைய அவர்களை இறைவன் சபிக்கின்றான், சபிப்பவர்களும் அவர்களை சபிக்கின்றர்.
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَـٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
160. மீட்சி-தேடுவோராகவும், சீர்படுவோராகவும், தெளிவடைவோராகவும் உள்ளோரை தவிர, அத்தகைய அவர்கள்மீது மீட்சியளிக்கின்றேன். நானே மீட்சியளிப்பவன் மிக்க-கருணையாளன்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ ٱللَّـهِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
161. நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, நிராகரித்தவர்களாகவே மரணித்தும் விடுகின்றார்களோ, அத்தகைய அவர்கள்மீது இறைவன், வானவர்கள், மனிதர்கள் என அனைவரின் சாபமும் உள்ளது.
خَـٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ
162. அதில் என்றென்றும் ஆகின்றர், தண்டனை அவர்களைவிட்டு இலேசாக்க மாட்டாது, அவர்கள் அவதானிக்கப்படவும் மாட்டார்கள்.
وَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ
163. உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனை தவிர இறையோன் இல்லை, சர்வ-வல்லோன் மிக்க-கருணையாளன்.
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱلْفُلْكِ ٱلَّتِى تَجْرِى فِى ٱلْبَحْرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّـهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٍ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ وَتَصْرِيفِ ٱلرِّيَـٰحِ وَٱلسَّحَابِ ٱلْمُسَخَّرِ بَيْنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
164. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மனிதர்களுக்குப் பயன் தரும்வகையில் கடலில் செல்லும் கப்பல்களிலும், தண்ணீரை வானிலிருந்து இறைவன் இறக்கிவைப்பதிலும், அதைக்கொண்டு பூமியை வாழ்விப்பதிலும் அது மரணித்த பின்பும்; உயிரினங்கள் ஒவ்வொன்றையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை வீசச்செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே வசப்பட்டிருக்கும் மேகங்களிலும், புரிந்துகொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளது.
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّـهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّـهِ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّا لِّلَّـهِ وَلَوْ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِذْ يَرَوْنَ ٱلْعَذَابَ أَنَّ ٱلْقُوَّةَ لِلَّـهِ جَمِيعًا وَأَنَّ ٱللَّـهَ شَدِيدُ ٱلْعَذَابِ
165. இறைவனை விடுத்துவிட்டு, மனிதர்களில் இருந்து சமமானவர்களாக எடுத்துக் கொள்வோரும் உள்ளர். இறைவனை நேசிப்பது போன்று, அவர்களை நேசிக்கின்றனர். நம்பிக்கை கொள்பவர்களோ, இறைவனிடமே நேசத்தை பலப்படுத்துவோராக உள்ளர். அக்கிரமமாக உள்ளவர்கள் காண்கையில், அவர்கள் காணும் தண்டனையாவது, நிச்சயமாக சக்தி அனைத்தும் இறைவனிடமே. நிச்சயமாக இறைவன் தண்டிப்பதில் கடுமையானவன்.
إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ
166. பின்பற்றப்பட்டவர்கள் பின்பற்றியவர்களிடம் இருந்து விடுவித்து கொள்ளும்போது, அத்தண்டனையைக் காண்பார்கள், அவற்றுடன் வழிகளும் அறுபட்டு விடுகின்றது.
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا۟ مِنَّا كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّـهُ أَعْمَـٰلَهُمْ حَسَرَٰتٍ عَلَيْهِمْ وَمَا هُم بِخَـٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
167. பின்பற்றியவர்கள் கூறுவார்கள், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின், நம்மிடமிருந்து அவர்கள் விடுவித்துக் கொண்டது போன்று, அவர்களிடமிருந்து விடுவித்து கொள்வோம். அவ்வாறே அவர்களின் செயல்களை, அவர்கள்மீது சோகமளிப்பதாக, இறைவன் அவர்களுக்கு காண்பிக்கின்றான். அவைகள் நெருப்பிலிருந்து அவர்களை வெளியேற்றவும் மாட்டாது.
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُوا۟ مِمَّا فِى ٱلْأَرْضِ حَلَـٰلًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
168. ஓ மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள், தீயோனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான விரோதி.
إِنَّمَا يَأْمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلْفَحْشَآءِ وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّـهِ مَا لَا تَعْلَمُونَ
169. நிச்சயமாக அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீயதையும், முறைகேடானதையும் இன்னும் நீங்கள் அறியாதவற்றை இறைவன்மீது கூறுவதையுமாகும்.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّـهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ
170. இறைவன் இறக்கிவைப்பதை பின்பற்றுங்கள் என அவர்களிடம் கூறும்போது, கூறுகின்றனர், உண்மையாதெனில், எங்கள் மூதாதையர்களை எதன்மீது கண்டோமோ, அதையே பின்பற்றுவோம். அவர்களின் மூதாதையர்கள், ஒரு விடயத்தையும் புரிந்து கொள்ளாதவர்களாக, வழிகாட்ட பெறாதவர்களாக இருந்தாலுமா!
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءً وَنِدَآءً صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَعْقِلُونَ
171. நிராகரித்தபடி உள்ளவர்களின் உதாரணம், சப்தமிட்டு அழைப்பதையும் அலறுவதையும் தவிர எதையும் செவிமடுக்காது இருப்பவனின் உதாரணத்தை போன்றது. செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். அவர்கள் புரிந்து கொள்பவர்களாக இல்லை.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّـهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
172. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! உங்களுக்கு நாம் வழங்கியுள்ள நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், இறைவனுக்கு நன்றியோடும் இருங்கள், நீங்கள் அவனுக்கு சேவையாற்றுபவர்களாக இருந்தால்.
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّـهِ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ إِنَّ ٱللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
173. நிச்சயமாக உங்கள்மீதுள்ள கட்டுப்பாடானது – செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், இறைவன் அல்லாததற்கு அதைக்கொண்டு அற்பணிப்பதும் ஆகும். பின் ஒருவர் நாட்டமின்றியும், வரம்புமீறாமலும் நிர்பந்திக்கப்பட்டால், பின் அவர்மீது குற்றமில்லை. நிச்சயமாக இறைவன் மன்னிப்பவன் கருணையாளன்.
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّـهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًا قَلِيلًا أُو۟لَـٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّـهُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
174. நிச்சயமாக எவர்கள் வேதத்திலிருந்து இறைவன் இறக்கிவைப்பதை மறைத்தவர்களாக, அதைக்கொண்டு சொற்பவிலையை பரிவர்த்தனை செய்கின்றார்களோ, அத்தகையோர் தங்களின் வயிறுகளில் நெருப்பை தவிர, அவர்கள் உண்ணவில்லை; நிலைபெறும் நாளன்று, இறைவன் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை உள்ளது.
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَـٰلَةَ بِٱلْهُدَىٰ وَٱلْعَذَابَ بِٱلْمَغْفِرَةِ فَمَآ أَصْبَرَهُمْ عَلَى ٱلنَّارِ
175. அத்தகையோர் வழிகாட்டளைவிட்டு வழிகேட்டையும், மன்னிப்பைவிட்டு தண்டனையையும் பரிவர்த்தனை செய்து கொள்பவர்கள். அந்நெருப்பின்மீது அவர்களை பொறுத்திடச் செய்தது எது?
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّـهَ نَزَّلَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِى ٱلْكِتَـٰبِ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ
176. அதன்காரணம் நிச்சயமாக இறைவன் சத்தியத்தைக் கொண்டு, வேதத்தை இறக்கியுள்ளான். வேதத்தில் முரண்பட்டு உள்ளவர்கள், நிச்சயமாக தொலைவான பிளவில் உள்ளர்.
لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلْكِتَـٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَـٰهَدُوا۟ وَٱلصَّـٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ
177. உங்களின் முகங்களை கிழுக்கும், மேற்கும் முன்னோக்குவதால், நலம்புரிவதாக ஆவதில்லை. ஆனால், நிச்சயமாக நலம்புரிதல் என்பது, இறைவனைக் கொண்டு மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொள்வது; தனக்கு நேசமான செல்வங்களை நெருக்கமானவர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழி மைந்தர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், சிறைபட்டு உள்ளோருக்கும் செலவு செய்வது; தொடர்பை நிலைநாட்டி, தூமையைக் கொண்டுவருவது; தாங்கள் வாக்களிக்கும்போது, தங்களின் வாக்குகளை நிறைவுசெய்வது; வேதனையான சமயம் – வேதனை மற்றும் கஷ்டத்தில் நிதானத்தை மேற்கொள்வதும் ஆகும். அத்தகைய அவர்களே தர்மவான்கள்; அத்தகைய அவர்களே பண்பட்டவர்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌ فَٱتِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَـٰنٍ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ
178. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! கொலையில் சட்ட-நடவடிக்கை உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தைக் கொண்டு சுதந்திரம்; சேவையைக் கொண்டு சேவை; பெண்மையை கொண்டு பெண்மை. பின் அதன் சகோதரத்தில் மன்னிப்பளிக்க விடயம் இருந்தால், மனிதாபிமானத்தைக் கொண்டு பின்தொடரவும். நல்லவிதமாக அதற்கு பூர்த்தி செய்யட்டும். அது உங்கள் பரிபாலனிடம் இருந்துள்ள தணிப்பும், கருணையுமாகும். அதன்பின்னர் எவரும் வரம்புமீறினால், பின் அதற்கு துன்புறுத்தும் தண்டனையுள்ளது.
وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
179. சட்ட-நடவடிக்கையில் உங்களுக்கு வாழ்வுள்ளது. ஓ உணர்வுடையவர்களே! நீங்கள் பண்பட்டவர்களாக ஆகும் பொருட்டே.
كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
180. உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள மரணம் உங்களில் ஒருவரை அணுகும்போது, அவர் விட்டுச்செல்வதை பெற்றோருக்கும் நெருக்கமானவர்களுக்கும் நல்லவிதமாக சாசனம் செய்வது, பண்பட்டவர்கள் மீதுள்ள சத்தியம்.
فَمَنۢ بَدَّلَهُۥ بَعْدَمَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثْمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓ إِنَّ ٱللَّـهَ سَمِيعٌ عَلِيمٌ
181. அதை செவியுற்ற பின்பு எவரும் அதை மாற்றினால், அதை மாற்றுகின்றார்களே அவர்கள்மீது நிச்சயமாக அதன் தீமையுள்ளது. நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் அறிந்தவன்.
فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ إِنَّ ٱللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
182. சாசனம் இட்டவரிடமிருந்து தவறையோ அல்லது தீமையையோ ஒருவர் அஞ்சி, பின் அவற்றிடையே சீர்செய்வது, அவர்மீது தீமையில்லை. நிச்சயமாக இறைவன் மன்னிப்பவன் கருணையாளன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
183. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! உங்களுக்கு முன்பு இருந்தோர்மீது விதிக்கப்பட்டது போன்று, நோன்பு உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது, நீங்கள் பண்பட்டவர்களாக ஆகும் பொருட்டு.
அரபு மொழியில், “صَوْم (ṣawm)” என்றால் நோன்பு அல்லது விரதம் என்று பொருள். இது இஸ்லாமிய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பரந்த கண்ணோட்டத்தில், “صَوْم” என்றால் ஏதாவது ஒன்றை தவிர்த்துக் கொள்வது என்று பொருள்.
எனவே, “صَوْم” என்றால் விரதம் / நோன்பு (முதன்மை பயன்பாடு) மற்றும் தவிர்த்துக் கொள்ளுதல் (பொதுவான பயன்பாடு) என்று புரிந்து கொள்ளலாம்.
أَيَّامًا مَّعْدُودَٰتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
184. எண்ணப்பட்ட நாட்களில். உங்களில் எவரும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால், எண்ணிக்கையானது மறு நாட்களில். அதில் சூழப்பட்டவர்கள், ஏழைக்கு உணவளித்து ஈடுசெய்யட்டும். எவர் நல்லவிதமாக பணிந்து நடக்கின்றாரோ, அது அவருக்கே நல்லதாகும். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால், நீங்கள் நோன்பிருப்பது உங்களுக்கு நல்லது.
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ ٱللَّـهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّـهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
185. உஷ்ணங்களின் வெளிப்பாடு யாதெனில், மனிதர்களுக்கு வழிகாட்டும் வாசிப்பு அதில் இறங்குகின்றது. வழிகாட்டுதலில் இருந்து தெளிவுகளும், பகுத்தறிதலும். உங்களில் அவ்வெளிப்பாட்டுக்கு சாட்சி ஆகின்றவர், அதை நோன்பிருக்கட்டும். நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால், எண்ணிக்கையானது மறு நாட்களில். இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகின்றான், சிரமமானதை உங்களுக்கு நாடுவதில்லை. எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்கும், உங்களுக்கு வழிகாட்டியதன் மீது இறைவனை நீங்கள் பெருமிதம் செய்வதற்கும், நீங்கள் நன்றியுடையோராக ஆகும் பொருட்டும்.
அரபு மொழியில், “صَوْم (ṣawm)” என்றால் நோன்பு அல்லது விரதம் என்று பொருள். இது இஸ்லாமிய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பரந்த கண்ணோட்டத்தில், “صَوْم” என்றால் ஏதாவது ஒன்றை தவிர்த்துக் கொள்வது என்று பொருள்.
எனவே, “صَوْم” என்றால் விரதம் / நோன்பு (முதன்மை பயன்பாடு) மற்றும் தவிர்த்துக் கொள்ளுதல் (பொதுவான பயன்பாடு) என்று புரிந்து கொள்ளலாம்.
وَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ
186. எனது சேவகர்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்கும்போது, நிச்சயமாக நான் சமீபமாகவே உள்ளேன். என்னை அழைக்கும்போது, அழைப்போரின் அழைப்புக்கு பதிலளிக்கின்றேன். ஆக எனக்கு அவர்கள் பதிலளிக்கட்டும், என்னுடன் அவர்கள் நம்பிக்கை கொள்ளட்டும், அவர்கள் சீர்பட்டவர்களாக ஆகும்பொருட்டு.
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ عَلِمَ ٱللَّـهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ فَٱلْـَٔـٰنَ بَـٰشِرُوهُنَّ وَٱبْتَغُوا۟ مَا كَتَبَ ٱللَّـهُ لَكُمْ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ مِنَ ٱلْخَيْطِ ٱلْأَسْوَدِ مِنَ ٱلْفَجْرِ ثُمَّ أَتِمُّوا۟ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيْلِ وَلَا تُبَـٰشِرُوهُنَّ وَأَنتُمْ عَـٰكِفُونَ فِى ٱلْمَسَـٰجِدِ تِلْكَ حُدُودُ ٱللَّـهِ فَلَا تَقْرَبُوهَا كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّـهُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
187. நோன்பின் இரவில், உங்கள் பெண்களிடம் உறவாடல் அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் உள்ளீர்கள். இறைவன் அறிந்தவன், நிச்சயமாக நீங்கள் உங்களின் ஆன்மாக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆக உங்கள்மீது மீட்சியளிக்கின்றான், உங்களை மன்னிக்கின்றான். ஆக இப்பொழுது அவர்களுக்கு நற்செய்தி அளிப்பீர்களாக. உங்களுக்கு இறைவன் விதிக்கப்படுவதை தேடிக்கொள்ளுங்கள். விடியலில் இருண்ட கீற்றிலிருந்து வெண்மை கீற்று தெளிவாகும்வரை – உண்ணுங்கள், பருகுங்கள். பிறகு இரவுவரை நோன்பை நிறைவாக்குங்கள். மரியாதைக்குரியதில் நீங்கள் ஈடுபட்டிருக்கையில், அவர்களின் நற்சேதிகளில் நீங்கள் இருக்கவேண்டாம். இவை இறைவனின் வரம்புகளாகும். ஆக அதனை நெருங்காதீர்கள். அவ்வாறே மனிதர்களுக்கு இறைவன் தனது அத்தாட்சிகளை தெளிவாக்குகின்றான், நீங்கள் பண்பட்டவர்களாக ஆகும் பொருட்டு.
அரபு மொழியில், “صَوْم (ṣawm)” என்றால் நோன்பு அல்லது விரதம் என்று பொருள். இது இஸ்லாமிய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பரந்த கண்ணோட்டத்தில், “صَوْم” என்றால் ஏதாவது ஒன்றை தவிர்த்துக் கொள்வது என்று பொருள்.
எனவே, “صَوْم” என்றால் விரதம் / நோன்பு (முதன்மை பயன்பாடு) மற்றும் தவிர்த்துக் கொள்ளுதல் (பொதுவான பயன்பாடு) என்று புரிந்து கொள்ளலாம்.
وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
188. உங்களது செல்வங்களை உங்களுக்கிடையே தவறான முறையில் புசிக்காதீர்கள். மனிதர்களின் செல்வங்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் புசிப்பதற்காக, அதைக்கொண்டு அதிகாரிகளிடம் செல்கின்றீர்கள், நீங்கள் அறிபவர்களாக இருந்தும்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ وَلَيْسَ ٱلْبِرُّ بِأَن تَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنِ ٱتَّقَىٰ وَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِنْ أَبْوَٰبِهَا وَٱتَّقُوا۟ ٱللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
189. பிறைகளை பற்றி உம்மிடம் கேட்கின்றனர். கூறும், அது மனிதர்களுக்கு காலம்காட்டி மற்றும் வாதம். வீடுகள் அவற்றின் பின்புறங்களில் வருவதைக் கொண்டு, நலமேதும் இல்லை. ஆனால் பண்படுதலில்தான் நலமுள்ளது. வீடுகளில் அதன் வாசல்களிலே வாருங்கள். இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள், நீங்கள் வெற்றியாளர்களாக இருக்கும் பொருட்டு.
وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّـهِ ٱلَّذِينَ يُقَـٰتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ إِنَّ ٱللَّـهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
190. உங்களோடு போரிடுகின்றார்களே, அவர்களிடம் இறைவனின் வழியில் போராடுங்கள். வரம்புமீறி விடாதீர்கள். வரம்புமீறுபவர்களை நிச்சயமாக இறைவன் நேசிப்பதில்லை.
وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ وَلَا تُقَـٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَـٰتِلُوكُمْ فِيهِ فَإِن قَـٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَـٰفِرِينَ
191. அவர்களை நீங்கள் கண்டுகொள்ளும் இடங்களில் அவர்களிடம் போராடுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றிய இடத்திலிருந்து அவர்களை வெளியேற்றுங்கள். போராட்டங்களில் உள்ள கடினம் சோதனையே. கட்டுப்பாடான மரியாதைக்கு உரியதுடன் அதில் உங்களிடம் அவர்கள் சண்டையிடாத வரை, அவர்களிடம் நீங்கள் சண்டையிட வேண்டாம். ஆக உங்களை அவர்கள் வீழ்த்தவந்தால், அவர்களை வீழ்த்துவீர்களாக. அவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு கூலியுள்ளது.
فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
192. பின் அவர்கள் நிறுத்திக்கொண்டால், நிச்சயமாக இறைவன் மன்னிப்பவன் கருணையாளன்.
وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّـهِ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ
193. சோதனை இருக்காமல், மார்க்கம் இறைவனுக்கே என ஆகும்வரை, அவர்களிடம் போராடுங்கள். அவர்கள் நிறுத்திக்கொண்டால், பின் அக்கிரமக்காரர்கள் மீது தவிர விரோதம் வேண்டாம்.
ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَـٰتُ قِصَاصٌ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ مَعَ ٱلْمُتَّقِينَ
194. கட்டுப்பாடான வெளிப்பாடைக் கொண்டு கட்டுப்பாடான வெளிப்பாடே. கட்டுப்பாடுகளில் சட்ட-நடவடிக்கை உள்ளது. உங்கள்மீது எவரும் மீறினால், உங்கள்மீது மீறப்பட்டதன் உதாரணத்தைக் கொண்டு அவர்மீது மீறுங்கள். இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். அறிந்துகொள்ளுங்கள், பண்படுபவர்களுடன் நிச்சயமாக இறைவன் உள்ளான்.
وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّـهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ وَأَحْسِنُوٓا۟ إِنَّ ٱللَّـهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
195. இறைவனின் வழியில் செலவிடுங்கள். உங்களின் கரங்களைக் கொண்டு, அழிவின்பால் செல்லாதீர்கள். நல்லவிதமாக இருங்கள், நல்லோர்களை நிச்சயமாக இறைவன் நேசிக்கின்றான்.
ا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ وَلَا تَحْلِقُوا۟ رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ ٱلْهَدْىُ مَحِلَّهُۥ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَآ أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِٱلْعُمْرَةِ إِلَى ٱلْحَجِّ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ فِى ٱلْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُۥ حَاضِرِى ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ شَدِيدُ ٱلْعِقَابِ
196. வாதம் மற்றும் ஆயுளை இறைவனிடம் நிறைவு செய்யுங்கள். நீங்கள் சிக்கல்பட்டு இருந்தால், வழிகாட்டப்படுவதில் சாத்தியமானதை தேடிக்கொள்ளவும். வழிகாட்டப்பட்டவை அதற்கு ஆகுமானதை அடையும்வரை, உங்களின் தலைகளை சிரைத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் எவரும் நோயாளியாகவோ அல்லது அதைக்கொண்டு தலையில் சிரமமோ இருந்தால், நோன்புகளில் ஈடுசெய்யட்டும் அல்லது தர்மம் அல்லது செயல்பாடுகள். பின் நீங்கள் நம்பிக்கை பெறும்போது, வாதத்தின்பால் ஆயுளைக்கொண்டு சவுகரியத்தில் உள்ளோர், வழிகாட்டப்படுவதில் சாத்தியமானதை தேடிக்கொள்ளவும். அவர் எதையும் கண்டுகொள்ள முடியாவிட்டால், நோன்பிருக்கட்டும் – வாதத்தில் மூன்று நாட்களும், நீங்கள் மீழும்போது ஏழும், இவை மொத்தம் பத்து. அது கட்டுபாடான மரியாதைக்குரியதை அணுகுதலில் எவரது குடும்பம் ஆகவில்லையோ, அவருக்கே. இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். அறிந்து கொள்ளுங்கள், முடிவெடுப்பதில் நிச்சயமாக இறைவன் கடுமையானவன்.
ٱلْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَـٰتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ ٱللَّـهُ وَتَزَوَّدُوا۟ فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰ وَٱتَّقُونِ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ
197. வாதம் அறியப்படுகின்ற வெளிப்பாடுகளே. அவற்றில் வாதத்தை தீர்மானித்து கொள்பவர், பின் வாதத்தில் ஆசாபாச-உறவாடல் வேண்டாம், கலகமும் வேண்டாம், சர்ச்சைகளும் வேண்டாம். நல்லதிலிருந்து நீங்கள் எதை செய்தாலும், அதை இறைவன் அறிவான். ஆக சித்தப்படுத்துங்கள். சித்தப்படுத்துதலில் சிறந்தது நிச்சயமாக பண்படுதலே. என்னை உணர்ந்தறிந்து-பண்படுங்கள், ஓ உணர்வுடையவர்களே!
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَـٰتٍ فَٱذْكُرُوا۟ ٱللَّـهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
198. உங்கள் பரிபாலனிடம் இருந்து நீங்கள் கிருபை தேடுவது, உங்கள்மீது குற்றமே இல்லை. ஆக விழிப்படைவதில் இருந்து நீங்கள் வெளிப்படும் போது, கட்டுப்பாடான வெளிப்பாட்டைக் கொண்டு, இறைவனை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு வழிகாட்டியதைப் போன்று, அவனை நினைவில் கொள்ளுங்கள். இதன்முன்னர் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
அரபியில் “عرفات(அரஃபாத்) / عرف (அரஃப்)” இவ்வார்த்தைகளுக்கு “அறிந்தது”, “விழிப்படைந்தது” போன்ற அர்த்தங்களும் உள்ளது.
ثُمَّ أَفِيضُوا۟ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّـهَ إِنَّ ٱللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
199. பிறகு மனிதர்கள் வெளிப்படும் இடங்களிலிருந்து வெளிப்படுங்கள். இறைவனிடம் மன்னிப்பை தேடுங்கள். நிச்சயமாக இறைவன் மன்னிப்பவன் கருணையாளன்.
فَإِذَا قَضَيْتُم مَّنَـٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّـهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍ
200. உங்களின் செயல்பாடுகளை நிறைவுசெய்யும் போது, இறைவனை நினைவுகூருங்கள். உங்களின் மூதாதையர்களை நீங்கள் நினைவுகூர்வது போன்று அல்லது இன்னும் வலுவாக நினைவுகூரவும். எங்கள் பரிபாலனே! இம்மையிலேயே எங்களுக்கு கொடுப்பாயாக எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளர். பின் மறுமையில் யாதொரு படைப்பும் அதற்கு இல்லை.
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
201. எங்கள் பரிபாலனே! இம்மையிலும் நல்லதை, மறுமையிலும் நல்லதை எங்களுக்கு கொடுப்பாயாக, நெருப்பின் தண்டனையை எங்களுக்கு தடுப்பாயாக – எனக் கூறுவோரும் அவர்களில் உள்ளர்.
أُو۟لَـٰٓئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا۟ وَٱللَّـهُ سَرِيعُ ٱلْحِسَابِ
202. அத்தகைய அவர்களுக்கு, அவர்களின் சம்பாத்தியத்தில் இருந்து பங்குள்ளது. இறைவன் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.
وَٱذْكُرُوا۟ ٱللَّـهَ فِىٓ أَيَّامٍ مَّعْدُودَٰتٍ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ لِمَنِ ٱتَّقَىٰ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
203. எண்ணப்பட்ட நாட்களில் இறைவனை நினைவுகூருங்கள். எவரும் இருநாட்களில் விரைந்து விட்டால், அவர்மீது குற்றமில்லை. எவரும் தாமதித்தால், அவர்மீதும் குற்றமில்லை. பண்படுவோருக்காக. இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّـهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ
204. இம்மை வாழ்வில் தனது கூற்றால், உம்மை வியக்கச் செய்வோரும், மனிதர்களில் உள்ளர். தனது இதயத்தில் உள்ளதன்மீது, இறைவனை சாட்சியாக்குவர். கடுமுரண்டாக தர்க்கங்களும் புரிவர்.
وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِى ٱلْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ ٱلْحَرْثَ وَٱلنَّسْلَ وَٱللَّـهُ لَا يُحِبُّ ٱلْفَسَادَ
205. அவன் புறக்கணித்து பூமியில் முற்படுவதாவது, அதில் குழப்பம்புரிவது, மேலும் விளைச்சளையும், வித்துக்களையும் நாசம்செய்வதே. இறைவன் குழப்பத்தை நேசிப்பதே இல்லை.
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّـهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ فَحَسْبُهُۥ جَهَنَّمُ وَلَبِئْسَ ٱلْمِهَادُ
206. இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுவாயாக என அவனிடம் கூறப்படும் போது, தீங்கை கொண்டு கௌரவத்தை அவன் எடுத்துக் கொள்கின்றான். அதன் கணக்கு நரகமே. மோசமான இருப்பிடமாகும்.
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّـهِ وَٱللَّـهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ
207. இறைவனின் திருப்தியைத் தேடி தனது ஆன்மாவை பரிமாற்றிக் கொள்வோரும் மனிதர்களில் உள்ளர். மேலும் இறைவன் சேவகர்களுடன் அன்பானவன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةً وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
208. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! சமாதானத்தில் முழுமையாக பிரவேசியுங்கள். தீயோனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான விரோதி.
فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَـٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ
209. தெளிவானவைகள் உங்களிடம் வந்த பின்னரும் தடுமாறுவீர்களாயின், அறிந்துகொள்வீர்களாக, நிச்சயமாக இறைவன் மிகைத்தவன் ஞானமானவன்.
هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّـهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَإِلَى ٱللَّـهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
210. மேகத்தின் நிழல்களில் – இறைவனும், வானவர்களும் அவர்களிடம் வந்து காரியத்தைத் தீர்த்துவைப்பதை தவிர அவதானிக்கின்றார்களா? காரியங்கள் இறைவனிடமே மீட்டப்படுகின்றது.
سَلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ كَمْ ءَاتَيْنَـٰهُم مِّنْ ءَايَةٍۭ بَيِّنَةٍ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ ٱللَّـهِ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَإِنَّ ٱللَّـهَ شَدِيدُ ٱلْعِقَابِ
211. இஸ்ராயீலின் சந்ததிகளிடம் கேளும், எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளோம்! அது வந்த பின்னர், எவர் இறைவனின் அருட்கொடைகளை மாற்றுகின்றாரோ, நிச்சயமாக இறைவன் முடிவெடுப்பதில் கடுமையானவன்.
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَٱللَّـهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
212. நிராகரித்தபடி உள்ளவர்களுக்கு, இம்மை வாழ்வு அலங்காரமாக உள்ளது. நம்பிக்கையோடு உள்ளவர்களை ஏளனம் செய்கின்றனர். பண்பட்டு வருவோர் நிலைபெறும் நாளன்று அவர்களுக்கு மேலாக இருப்பர். மேலும் இறைவன் தான் நாடியோருக்கு கணக்கின்றி வாழ்வாதாரம் வழங்குகின்றான்.
كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّـهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ فَهَدَى ٱللَّـهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ وَٱللَّـهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
213. மனிதகுலம் ஒரே சமுதாயமாக இருந்தது. பின் எதில் வேறுபடுகின்றார்களோ, அதில் மனிதர்களிடையே ஞானதீர்வு அளிப்பதற்காக – நற்செய்தி அளிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை எழுப்புகின்றான். அவர்களோடு சத்தியத்தைக் கொண்டு வேதத்தையும் இறக்குகின்றான். எவர்களுக்கு அது கொடுக்கப் படுகின்றதோ அவர்களுக்கு தெளிவானவைகள் வந்த பின்னரே தவிர அதில் மாறுபடவில்லை. அவர்களிடையே உள்ள பொறாமை. பின் சத்தியத்தில் இருந்து எதில் மாறுபட்டார்களோ அதற்கு நம்பிக்கையோடு உள்ளவர்களை இறைவன் தனது அனுமதியைக்கொண்டு வழிகாட்டுகின்றான். மேலும் தான் நாடியோரை நேர்நிலையான பாதையின்பால் வழிநடத்துகின்றான்.
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّـهِ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّـهِ قَرِيبٌ
214. அல்லது உங்களுக்கு முன்னர் சென்றுவிட்டார்களே, அவர்களின் உதாரணத்தில் உங்களுக்கு வராமலே, தோட்டத்தில் நீங்கள் பிரவேசித்து விடலாமென எண்ணுகின்றீர்களா? துன்பங்களும், கஷ்டங்களும் அவர்களை தீண்டின. இறைவனின் உதவி எப்பொழுதென தூதரும், அவரோடு சேர்ந்து நம்பிக்கையோடு உள்ளவர்களும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப் பட்டார்கள். நிச்சயமாக இறைவனின் உதவி சமீபத்தில் அல்லவா.
يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّـهَ بِهِۦ عَلِيمٌ
215. தாங்கள் எதை செலவு செய்வது என உம்மிடம் கேட்கின்றனர். கூறும், நல்லதில் எதை நீங்கள் செலவு செய்தாலும் – பெற்றோருக்கும், நெருக்கமானவர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழி மைந்தர்களுக்கும். இன்னும் நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செய்தாலும், நிச்சயமாக இறைவன் அதனுடன் அறிந்தவன்.
كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَٱللَّـهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
216. போராடுதல் உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு அது வெறுப்பாக இருப்பினும். ஒரு விடயத்தை நீங்கள் வெறுக்கலாம், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். ஒரு விடயத்தை நீங்கள் விரும்பலாம், அது உங்களுக்கு தீங்காக இருக்கும். நீங்கள் அறியாதவர்களாக இருப்பினும், இறைவன் அறிவான்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّـهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّـهِ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَـٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَـٰعُوا۟ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
217. கட்டுப்பாடான வெளிப்பாடு – அதில் சண்டையிடுவது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். கூறும் அதில் சண்டையிடுவது பெரிதே. இறைவனின் வழியைவிட்டு தடுப்பது, அதனுடன் கட்டுப்பாடான மரியாதைக்குரியதை நிராகரிப்பது, அதன் குடும்பத்தை அதிலிருந்து வெளியேற்றுவது, இறைவனிடம் இன்னும் பெரிது. போராட்டத்தில் பெரியது சோதனையே. அவர்களுக்கு இயலுமாயின், உங்களின் வழியைவிட்டு உங்களை அவர்கள் திருப்பிவிடும் வரை, உங்களிடம் சண்டையிடுவதை அவர்கள் நிறுத்தமாட்டார்கள். உங்களில் எவரும் அவனது வழியிலிருந்து திரும்பி பின் நிராகரித்தபடி மரணிக்கின்றார் என்றால், அத்தகையோருக்கு அவர்களின் செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிகின்றது. அத்தகையோர் நெருப்பின் கூட்டாளிகள். அதில் அவர்கள் என்றென்றும் ஆகின்றர்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّـهِ أُو۟لَـٰٓئِكَ يَرْجُونَ رَحْمَتَ ٱللَّـهِ وَٱللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ
218. நிச்சயமாக நம்பிக்கை கொள்பவர்கள், புலம்பெயர்பவர்கள், இறைவனின் வழியில் முயல்பவர்கள் – அத்தகையோர் இறைவனின் கருணையை எதிர்பார்க்கின்றனர். இறைவன் மன்னிப்பவன் கருணையாளன்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ قُلْ فِيهِمَآ إِثْمٌ كَبِيرٌ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا وَيَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّـهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
219. போதை மற்றும் சூதாட்டம் குறித்து உம்மிடம் கேட்கின்றனர். கூறும், அவ்விரண்டிலும் மனிதர்களுக்கு பெருங்கேடும், பயன்களுமுள்ளது. அவ்விரண்டின் கேடு, அவ்விரண்டின் பலனைவிட பெரிது. தாங்கள் எதை செலவு செய்வது என்றும் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், மிகுதியானதை. அவ்வாறே, அத்தாட்சிகளை உங்களுக்கு இறைவன் தெளிவாக்குகின்றான். நீங்கள் சிந்திக்கும் பொருட்டு.
فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَـٰمَىٰ قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ وَٱللَّـهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ وَلَوْ شَآءَ ٱللَّـهُ لَأَعْنَتَكُمْ إِنَّ ٱللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ
220. இம்மையிலும் மறுமையிலும் அனாதைகளை குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு சீர்படுத்துவது நல்லது. அவர்களோடு பழக்கத்தில் உள்ளீர்கள் என்றால், உங்களின் சகோதரர்களே. சீர்செய்வோரிடம் இருந்து குழுப்பம்புரிவோனை இறைவன் அறிவான். இறைவன் நாடினால், உங்களை சிரமத்தில் ஆக்கிவிடுவான். நிச்சயமாக இறைவன் மிகைத்தவன் ஞானமானவன்.
وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَـٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُو۟لَـٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ وَٱللَّـهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ وَيُبَيِّنُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
221. இணைவைப்பவள்கள் அவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை மணமுடிக்காதீர்கள். உங்களை அவள் கவர்ந்தபோதிலும், இணைவைப்பவளை விட நம்பிக்கை கொண்டுள்ள சேவகி சிறந்தது. இணைவைப்பவன்கள் அவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை மணமுடிக்காதீர்கள். உங்களை அவன் கவர்ந்தபோதிலும், இணைவைப்பவனை விட நம்பிக்கை கொண்டுள்ள சேவகன் சிறந்தது. அத்தகையோர் நெருப்பின்பால் அழைக்கின்றர். இறைவனோ தோட்டம் மற்றும் அவனது அனுமதியைக் கொண்டு மன்னிப்பின்பால் அழைக்கின்றான். மேலும் மனிதர்களுக்கு அவனது அத்தாட்சிகளை தெளிவாக்குகின்றான். நீங்கள் நினைவுகூரும் பொருட்டு.
وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَٱعْتَزِلُوا۟ ٱلنِّسَآءَ فِى ٱلْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ ٱللَّـهُ إِنَّ ٱللَّـهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلْمُتَطَهِّرِينَ
222. மாதவிலக்கு குறித்தும் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், அது ஒரு சிரமம். மாதவிலக்கில் பெண்களை விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையானதும், இறைவன் உங்களுக்கு ஏவியமுறையில் அவர்களை அணுகுங்கள். நிச்சயமாக இறைவன் மீள்பவர்களை நேசிக்கின்றான். தூய்மையாக உள்ளோரையும் நேசிக்கின்றான்.
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَـٰقُوهُ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
223. உங்களின் பெண்கள் உங்களுக்கு விளைச்சல்கள். ஆக நீங்கள் நாடியபடி, உங்களின் விளைச்சலை அணுகுங்கள். உங்களின் ஆன்மாக்களுக்காக முற்படுத்துங்கள். இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவனை சந்திப்பவர்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி அளிப்பீராக.
وَلَا تَجْعَلُوا۟ ٱللَّـهَ عُرْضَةً لِّأَيْمَـٰنِكُمْ أَن تَبَرُّوا۟ وَتَتَّقُوا۟ وَتُصْلِحُوا۟ بَيْنَ ٱلنَّاسِ وَٱللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ
224. உங்களின் நம்பிக்கைகளில்-உடன்படிக்கைகளில் நீங்கள் நலம்புரிய, நீங்கள் பண்பட, மனிதர்களிடையே நீங்கள் சீர்பட – இறைவனை தடையாக ஆக்காதீர்கள். இறைவன் செவியுறுபவன் அறிந்தவன்.
لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّـهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَٱللَّـهُ غَفُورٌ حَلِيمٌ
225. உங்களது நம்பிக்கைகளில்-உடன்படிக்கைகளில் வீணானவற்றை கொண்டு, இறைவன் உங்களைப் பிடிப்பதில்லை. எனினும், உங்களின் இதயங்கள் சம்பாதிப்பதைக் கொண்டு, உங்களை பிடிக்கின்றான். இறைவன் மன்னிப்பாளன் சகிப்பவன்.
لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ
226. தங்களின் பெண்களிடமிருந்து உறுதி-கூறுகின்றார்களே, அவர்களுக்கு காத்திருப்பானது நான்கு மாதங்கள். திரும்புவார்களாயின், நிச்சயமாக இறைவன் மன்னிப்பாளன் கருணையாளன்.
وَإِنْ عَزَمُوا۟ ٱلطَّلَـٰقَ فَإِنَّ ٱللَّـهَ سَمِيعٌ عَلِيمٌ
227. விவாகரத்தை தீர்க்கம் செய்வார்களாயின், நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் அறிந்தவன்.
وَٱلْمُطَلَّقَـٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَـٰثَةَ قُرُوٓءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ ٱللَّـهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَـٰحًا وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَٱللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ
228. விவாகரத்து ஆனவள்கள் தங்களது ஆன்மாக்களைக் கொண்டு மூன்று குறிப்புகள் காத்திருப்பார்களாக. இறைவனைக் கொண்டு மறுமை நாளை நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், தங்களின் கருவறைகளில் இறைவன் படைப்பதை மறைப்பதென்பது, அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களின் கணவன்கள் சீர்பாட்டை நாடுவார்களாயின், அதில் அவள்களை திருப்பிக்கொள்வதுடன் சத்தியமுள்ளது. அவள்களுக்கும் தங்கள்மீதிருப்பது போன்று நியாயமானதைக் கொண்டு உள்ளது. ஆண்களுக்கு அவள்கள்மீது ஒரு படித்தரமுள்ளது. மேலும் இறைவன் மிகைத்தவன் ஞானமானவன்.
ٱلطَّلَـٰقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَـٰنٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّـهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّـهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ تِلْكَ حُدُودُ ٱللَّـهِ فَلَا تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّـهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
229. விவாகரத்து இருமுறையே. ஆக கனிவுடன் கூடியிருக்கவும் அல்லது நல்லமுறையில் விடுபடவும். இறைவனின் வரம்புகளை அவ்விரண்டும் நிலைநிறுத்த வில்லை என, அவ்விருவரும் பயந்தாலன்றி, நீங்கள் அவள்களுக்கு கொடுத்ததிலிருந்து யாதொரு விடயத்தையும் எடுத்துக்கொள்வது என்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. பின் இறைவனின் வரம்புகளை அவ்விரண்டும் நிலைநிறுத்த வில்லை என, நீங்கள் பயந்தால், அதைக்கொண்டு அவள் ஈடுசெய்வதில், அவ்விருவர்மீதும் குற்றமில்லை. இவை இறைவனின் வரம்புகளாகும். ஆக அவற்றில் வரம்புமீறாதீர்கள். எவர் இறைவனின் வரம்புகளை மீறுகின்றாரோ, அத்தகைய அவர்கள் அக்கிரமக்காரர்களே.
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّـهِ وَتِلْكَ حُدُودُ ٱللَّـهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
230. அவள் விவாகரத்து ஆகிவிட்டால், பின்னர் அவனுக்கு அவள் ஆகுமல்ல. அவனை அல்லாது ஒரு துணையை அவள் மணமுடித்து, பின் அவள் விவாகரத்தானாலே தவிர. பின் அவ்விருவரும் மீள்வார்களானால், இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்தலாம் என்பதை அவ்விருவரும் கருத்தில் கொள்வார்களானால், அவ்விருவர் மீது ஒரு குற்றமும் இல்லை. இவை இறைவனின் வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்கு அவற்றை தெளிவாக்குகின்றான்.
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَـٰتِ ٱللَّـهِ هُزُوًا وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّـهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَـٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
231. பெண்களை நீங்கள் விவாகரத்து செய்து, பின் அவர்கள் தங்களின் தவனையை அடையும்போது, பின் கனிவுடன் அவர்களுடன் கூடியிருங்கள் அல்லது கனிவுடன் அவர்களை விடுபடுங்கள். அவர்களை உங்கள்கூட வைத்து கஷ்டப்படுத்தி வரம்புமீறி விடாதீர்கள். எவரேனும் அதைச் செய்தால், திடனாக அவரது ஆன்மாவிற்கே அக்கிரமம் இழைத்துக் கொள்கின்றார். இறைவனின் அத்தாட்சிகளைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள்மீதான இறைவனின் அருட்கொடைகளையும், வேதத்திலிருந்து உங்கள்மீது இறக்குவதையும், ஞானதீர்வையும் நினைவுகூருங்கள். அதைக்கொண்டு உங்களுக்கு போதிக்கின்றான். இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு விடயத்துடனும் அறிந்தவன்.
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ وَٱللَّـهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
232. பெண்களை நீங்கள் விவாகரத்து செய்து, பின் அவர்கள் தங்களின் தவனையை அடைந்ததும், தங்களுக்கான துணைகளை மணமுடித்து கனிவைக் கொண்டு தங்களிடையே திருப்தியுடன் இருக்கும்போது, அவர்களை நீங்கள் தவறாகக்கொள்ள வேண்டாம். அது உங்களில் எவர் இறைவனைக் கொண்டு மறுமை நாளை நம்பிக்கைவைத்து இருக்கின்றாரோ, அவர் அதைக்கொண்டே போதிக்கப்படுகின்றார். அது உங்களுக்கு தூய்மையானதும், பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் அறியாதவர்களாக இருப்பினும், இறைவன் அறிவான்.
وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَـٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَـٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
233. தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக பாலூட்டுவார்களாக. நிறப்பமாக பாலூட்ட விரும்புவோருக்காக. அதற்கு கனிவைக்கொண்டு அவர்களுக்கு வாழ்வாதாரமும், அவர்களுக்கு ஆடைகளும் வழங்குவது தந்தையர்மீது உள்ளது. ஒரு ஆன்மாவும் அதன் சக்திக்குமீறி சுமத்தப்பட மாட்டாது. தாயை அவரது குழந்தையின் காரணமாக துன்புறுத்தப்படுதல் இல்லை. தந்தை அவருக்கும் அவரது குழந்தையின் காரணமாக இல்லை. அது போன்றே வாரிசு மீதுமுள்ளது. தீர்வை விரும்பி அவ்விருவரும் பரஸ்பரம்-இணங்கி ஆலோசித்து கொண்டால், அவ்விருவர் மீதும் குற்றமில்லை. நீங்கள் விரும்பி உங்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட தேடுவீர்களாயின், கனிவைக்கொண்டு நீங்கள் கொடுக்கவேண்டியதை நீங்கள் பூரணமாக்கும் போது, உங்கள்மீது குற்றமில்லை. இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இறைவன் நீங்கள் செயல்படுவதுடன் பார்த்தவனாக உள்ளான்.
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ وَٱللَّـهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
234. உங்களிடமிருந்து கைபற்றப்பட்டு துணைகளை விடுபட்டவர்களாக உள்ளோருக்கு, அவள்களின் ஆன்மாவைக் கொண்டு நான்கு மாதங்களும் பத்தும் பொறுத்திருக்கட்டும். அவள்கள் தவனையை அடைந்ததும், கனிவைக்கொண்டு அவள்களின் ஆன்மாக்களுக்கு செய்துகொள்வதில், உங்கள்மீது குற்றமில்லை. மேலும் இறைவன் உங்களது செயல்களுடன் விழிப்பானவன்.
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ عَلِمَ ٱللَّـهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَـٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَـٰبُ أَجَلَهُۥ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ غَفُورٌ حَلِيمٌ
235. பெண்களை வேண்டியவராக, அதைக்கொண்டு நீங்கள் தெரிவிப்பதிலோ அல்லது உங்களது ஆன்மாக்களில் மறைத்திருப்பதோ, உங்கள்மீது குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் விரைவில் அவர்களை நினைக்க ஆரம்பிப்பீர்கள் என்பதை இறைவன் அறிவான். என்றாலும் கண்ணியமான கூற்றை நீங்கள் கூறுவதைத் தவிர்த்து, இரகசியமாக அவள்களிடம் வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள். விதிக்கப்பட்ட அதன் தவனையை அடையும்வரை திருமண முடிச்சையும் தீர்க்கம் செய்து கொள்ளாதீர்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், உங்களது ஆன்மாக்களில் உள்ளதை நிச்சயமாக இறைவன் அறிவான். ஆக அதில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இறைவன் மன்னிப்பாளன் சகிப்பவன்.
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
236. பெண்களை நீங்கள் தொடவோ அல்லது தீர்மானங்களை அவர்களிடம் தீர்மானிக்கவோ இல்லாமல், அவர்களை நீங்கள் விவாகரத்து சொல்வீர்களாயின், உங்கள்மீது குற்றமில்லை. கனிவைக் கொண்டு அவர்களுக்கு ஆறுதலளியுங்கள். வசதியானவன் மீது அவனுக்குத் தக்கஅளவும், ஏழையின் மீது அவனுக்குத் தக்கஅளவும். நல்லோர்கள் மீதுள்ள சத்தியமாகும்.
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ ٱللَّـهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
237. அவள்களை நீங்கள் தொடுவதற்கு முன்னர், திடனாக தீர்மானங்களை அவள்களிடம் தீர்மானித்துவிட்டு, அவள்களை விவாகரத்து சொல்வீர்களாயின், அவள்கள் விட்டுவிட்டாலோ அல்லது திருமண முடிச்சு எவர் கையில் உள்ளதோ அவர் விட்டுவிட்டாலோ அன்றி, நீங்கள் தீர்மானித்ததில் பாதியுள்ளது. விட்டுக் கொடுப்பீர்களாயின், பண்படுதலுக்கு நெருக்கமானதாகும். உங்களுக்கிடையே கிருபையை மறவாதீர்கள். நிச்சயமாக இறைவன் நீங்கள் செயல்படுவதுடன் பார்த்தவனாக உள்ளான்.
حَـٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّـهِ قَـٰنِتِينَ
238. தொடர்புகளின்மீது பேணுதலாய் இருங்கள் தொடர்பில் நடுநிலையை. இறைவனுக்கு பணிந்துநடப்பதை நிலைப்படுத்துங்கள்.
فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَآ أَمِنتُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّـهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ
239. நீங்கள் பயந்தால், நடையிலோ அல்லது பயணத்திலோ. நீங்கள் நம்பிக்கைபெறும் போது, நீங்கள் அறியாமலே இருந்தவற்றை உங்களுக்கு அறிவித்தது போன்று இறைவனை நினைவுகூருங்கள்.
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَـٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ وَٱللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ
240. உங்களிடமிருந்து கைபற்றப்பட்டு துணைகளை விடுபட்டவர்களாக உள்ளோர், அவர்களின் துணைகளுக்கு வெளியேற்றப்படாமல், ஓராண்டுக்கான ஆறுதலான நியமனம் இருக்கட்டும். அவள்களே வெளியேறினால், பின் நல்லமுறையில் தங்களின் ஆன்மாக்களுக்கு அவர்கள் செய்துகொள்வதில், உங்கள்மீது குற்றமில்லை. இறைவன் மிகைத்தவன் ஞானமானவன்.
وَلِلْمُطَلَّقَـٰتِ مَتَـٰعٌۢ بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
241. விவாகரத்து ஆனவள்களுக்கும் நல்லமுறையில் ஆறுதலளிக்கவும். பண்பட்டவர்கள் மீதுள்ள சத்தியமாகும்.
كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّـهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
242. அவ்வாறே, இறைவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு தெளிவாக்குகின்றான், நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّـهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَـٰهُمْ إِنَّ ٱللَّـهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
243. மரண பயத்தில் தங்களின் இல்லங்களில் இருந்து ஆயிரக்-கணக்கானவர்கள் வெளியேறுகின்றார்களே, அவர்களை நீ பார்க்கவில்லையா? இறைவன் அவர்களிடம் கூறுகின்றான், மரணியுங்கள். பிறகு அவர்களுக்கு வாழ்வளிக்கின்றான். நிச்சயமாக இறைவன் மனிதர்கள்மீது கிருபையுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றியோடு இருப்பதில்லை.
وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّـهِ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ سَمِيعٌ عَلِيمٌ
244. இறைவனின் வழியில் போராடுங்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் அறிந்தவன்.
مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّـهَ قَرْضًا حَسَنًا فَيُضَـٰعِفَهُۥ لَهُۥٓ أَضْعَافًا كَثِيرَةً وَٱللَّـهُ يَقْبِضُ وَيَبْصُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
245. நல்லதொரு கடனாக இறைவனுக்கு கடனளிப்போர் யார்? அதை அவருக்கு கூட்டித்தருகின்றான், பன்மடங்காகக் கூட்டுகின்றான். இறைவன் வாங்கிக் கொள்கின்றான், விரிவாக்கவும் செய்கின்றான். அவனிடமே மீளுகின்றீர்கள்.
أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّۢ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًا نُّقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّـهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَـٰتِلُوا۟ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَـٰتِلَ فِى سَبِيلِ ٱللَّـهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَـٰرِنَا وَأَبْنَآئِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ وَٱللَّـهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ
246. இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த பிராதானிகளை நீ பார்க்கவில்லையா? தங்களுக்கான நபியிடம் அவர்கள் கூறியதாவது, ஒரு அரசரை எங்களுக்காக எழுப்பவும், இறைவனின் வழியில் போராடுவோம். கூறினார், போராடுதல் உங்கள்மீது விதிக்கப்படுமாயின், போராடுவீர்களா? போராட மாட்டீர்களா? கூறினார்கள், எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் மகன்களிடமிருந்து திடனாக நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்க, இறைவனின் வழியில் நாங்கள் போராடாமல் இருக்க எங்களுக்கு என்னவுள்ளது. பின் போராடுதல் அவர்கள்மீது விதிக்கப்பட்ட போது, அவர்களில் சிலரைத் தவிர விலகிவிட்டனர். அக்கிரமக்காரர்களுடன் இறைவன் அறிந்தவனாக உள்ளான்.
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّـهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ ٱلْمَالِ قَالَ إِنَّ ٱللَّـهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةً فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ وَٱللَّـهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ وَٱللَّـهُ
247. அவர்களின் நபி அவர்களிடம் கூறினார், நிச்சயமாக இறைவன் திடனாக தாலுத்தை உங்களுக்கு அரசராக எழுப்புகின்றான். கூறினார்கள், எங்கள்மீது ஆட்சி செய்ய அவருக்கு ஆவது எப்படி? அவரைவிட ஆட்சிபுரிய எங்களுக்கே சத்தியமுள்ளது. செல்வங்களில் இருந்தும் விசாலமாக கொடுக்கப்படாது உள்ளார். கூறினார், நிச்சயமாக இறைவன் உங்கள்மீது அவரையே தேர்ந்தெடுத்துள்ளான். அறிவாற்றலிலும் உடல்வலுவிலும் விரிவாக்கத்தை அவருக்கு கூட்டுகின்றான். இறைவன் தான் நாடியோருக்கு தனது ஆட்சியை கொடுக்கின்றான். இறைவன் விசாலமானவன் அறிந்தவன்.
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ءَايَةَ مُلْكِهِۦٓ أَن يَأْتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَـٰرُونَ تَحْمِلُهُ ٱلْمَلَـٰٓئِكَةُ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
248. அவர்களின் நபி அவர்களிடம் கூறினார், நிச்சயமாக அவரது ஆட்சியின் அத்தாட்சியானது ஒரு பேழை உங்களிடம் வரும். அதில் உங்கள் பரிபாலனிடம் இருந்து ஆறுதல் இருக்கும். மூஸாவின் குடும்பம் மற்றும் ஹாரூனின் குடும்பத்தில் இருந்து எஞ்சியிருப்பவையும். வானவர்கள் அதை சுமந்திருப்பர். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், நிச்சயமாக அதில் உங்களுக்கு அத்தாட்சியுள்ளது.
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّـهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ ٱللَّـهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّـهِ وَٱللَّـهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ
249. தாலூத் சேனைகளுடன் புறப்பட்டபோது கூறினார், ஒரு நதியைக் கொண்டு, நிச்சயமாக இறைவன் உங்களை பரீட்ச்சிப்பான். அதிலிருந்து அருந்துபவர், என்னில் உள்ளவர் அல்ல. அதிலிருந்து தன் கரத்தினால் ஒரு சிறங்கை அள்ளியதை தவிர எவர் அதை சுவைக்க வில்லையோ, நிச்சயமாக அவர் என்னில் உள்ளவர். அவர்களில் சிலரை தவிர அதிலிருந்து அருந்தினார்கள். பின் அவரும் அவரோடு சேர்ந்து நம்பிக்கையாளர்களும் அதனை கடந்ததும் கூறினார்கள், ஜாலூத் மற்றும் அவனது சேனைகளுடன் இன்று எங்களுக்கு தெம்பில்லை. நிச்சயமாக தாங்கள் இறைவனை சந்திப்பவர்கள் என்பதை கருத்தில் கொண்டார்களே அவர்கள் கூறியது, இறைவனின் அனுமதியைக் கொண்டு எத்தனையோ சிறு கூட்டம் பெரும் கூட்டத்தை வென்றுள்ளது. நிதானம் கொள்பவர்களோடு இறைவன் உள்ளான்.
وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
250. ஜாலூத் மற்றும் அவனது சேனைகளை நோக்கி அவர்கள் புறப்பட்ட போது கூறினார்கள், எங்கள் பரிபாலனே! நிதானத்தை எங்கள்மீது பொழிவாயாக. எங்கள் பாதங்களையும் உறுதிபடுத்துவாயாக. மேலும் நிராகரிக்கின்ற இம்மக்கள்மீது எங்களுக்கு உதவிபுரிவாயாக.
فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّـهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّـهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ وَلَوْلَا دَفْعُ ٱللَّـهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَـٰكِنَّ ٱللَّـهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ
251. ஆக இறைவனின் அனுமதியைக் கொண்டு அவர்களை முறியடித்தனர். ஜாலூத்தை தாவூத் வீழ்த்தினார். இறைவன் ஆட்சியையும் ஞானத்தையும் அவருக்கு கொடுத்தான். தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்றுக்கொடுத்தான். மனிதர்கள் அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு தடுக்காவிட்டால், இப்பூமி சீர்குலைந்து போய்விடும். எனினும் நிச்சயமாக இறைவன் அகிலங்கள்மீது கிருபையுடையவன்.
تِلْكَ ءَايَـٰتُ ٱللَّـهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ وَإِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
252. இவை இறைவனின் அத்தாட்சிகளாகும். சத்தியத்தைக் கொண்டு உம்மீது அவற்றை ஓதுகின்றோம். நிச்சயமாக நீயும் தூதர்களில் ஒருவராவீர்.
تِلْكَ ٱلرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ مِّنْهُم مَّن كَلَّمَ ٱللَّـهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَـٰتٍ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ وَلَوْ شَآءَ ٱللَّـهُ مَا ٱقْتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعْدِهِم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ وَلَـٰكِنِ ٱخْتَلَفُوا۟ فَمِنْهُم مَّنْ ءَامَنَ وَمِنْهُم مَّن كَفَرَ وَلَوْ شَآءَ ٱللَّـهُ مَا ٱقْتَتَلُوا۟ وَلَـٰكِنَّ ٱللَّـهَ يَفْعَلُ مَا يُرِيدُ
253. இந்த தூதுகளில் அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக கிருபை புரிந்துள்ளோம். அவர்களில் இறைவனின் பேச்சு உள்ளது. அவர்களில் சிலரைப் படித்தரங்களில் உயர்த்தியும் உள்ளான். தெளிவானவற்றுடன் மர்யமின் மகன் ஈஸாவை கொண்டுவந்தோம். பரிசுத்த சுவாசத்தால் அவரை வலுவூட்டினோம். இறைவன் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தெளிவானவைகள் தங்களிடம் வந்தபின்னர், சண்டையிட்டிருக்க மாட்டர். எனினும் வேறுபாடுகள் கொண்டனர். அவர்களில் நம்பிக்கையும் உள்ளது. அவர்களில் நிராகரிப்பும் உள்ளது. இறைவன் நாடியிருந்தால், சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் நிச்சயமாக இறைவன் தான் நாடியதைச் செய்கின்றான்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِمَّا رَزَقْنَـٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَـٰعَةٌ وَٱلْكَـٰفِرُونَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
254. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர், உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள். அதில் ஒப்பந்தம் இல்லை, நட்பும் இல்லை, பரிந்துரையும் இல்லை. நிராகரிக்கின்றார்களே அவர்கள் அக்கிரமக்காரர்களே.
ٱللَّـهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ
255. இறைவன் – அவனை தவிர இறையோன் இல்லை. வாழ்பவன். நிலையானவன். சிறு-துயிலும் அவனை ஆட்கொள்ளாது, உறக்கமும் மாட்டாது. வானங்களிலுள்ள யாவும் பூமியிலுள்ள யாவும் அவனிடமே. அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்வோர் யார்? அவர்கள் முன்னிடையே உள்ளதையும், அவர்கள் பின்னால் உள்ளதையும் அறிவான். அவன் நாடியதைக் கொண்டே தவிர அவனது அறிவிலிருந்து ஒரு விடயத்தையும் அவர்கள் சூழ்ந்தறிய முடியாது. அவனது அரியாசனம் வானங்களிலும் பூமியிலும் பரந்துவிரிந்து உள்ளது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமல்ல. அவன் மிக்க மேலானவன் மகத்துவமிக்கவன்.
لَآ إِكْرَاهَ فِى ٱلدِّينِ قَد تَّبَيَّنَ ٱلرُّشْدُ مِنَ ٱلْغَىِّ فَمَن يَكْفُرْ بِٱلطَّـٰغُوتِ وَيُؤْمِنۢ بِٱللَّـهِ فَقَدِ ٱسْتَمْسَكَ بِٱلْعُرْوَةِ ٱلْوُثْقَىٰ لَا ٱنفِصَامَ لَهَا وَٱللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ
256. மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை. வழிகேட்டை விட்டு சீரானவை திடனாக தெளிவாக்கப் படுகின்றது. எவர் வரம்பு-மீறுபவைகளை நிராகரித்து, இறைவனுடன் நம்பிக்கை கொள்கின்றாரோ, திடனாக உறுதியான பிடிமானத்தை பிடித்துக் கொள்கின்றார். அதற்கு உடைபாடே இல்லை. இறைவன் செவியுறுபவன் அறிந்தவன்.
ٱللَّـهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْلِيَآؤُهُمُ ٱلطَّـٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَـٰتِ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
257. நம்பிக்கை கொள்கின்றார்களே, அவர்களுக்கு இறைவனே வழி. இருள்களிலிருந்து ஒளியின்பால் அவர்களை வெளிக்கொண்டு வருகின்றான். நிராகரித்தபடி உள்ளார்களே, அவர்களின் வழிகள் வரம்புமீறுவதே. ஒளியிலிருந்து இருள்களின்பால் அவர்களை கொண்டு செல்கின்றது. அத்தகையோர் நெருப்பின் கூட்டாளிகள். அதில் அவர்கள் என்றென்றும் ஆகின்றர்.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِى حَآجَّ إِبْرَٰهِـۧمَ فِى رَبِّهِۦٓ أَنْ ءَاتَىٰهُ ٱللَّـهُ ٱلْمُلْكَ إِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّىَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحْىِۦ وَأُمِيتُ قَالَ إِبْرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّـهَ يَأْتِى بِٱلشَّمْسِ مِنَ ٱلْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ ٱلْمَغْرِبِ فَبُهِتَ ٱلَّذِى كَفَرَ وَٱللَّـهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
258. ஆட்சியை இறைவன் தனக்கு கொடுத்ததைக் கொண்டு, இப்ராஹீமிடம் அவரது பரிபாலனன் குறித்து வாதம் செய்த ஒருவனை நீ பார்க்கவில்லையா? அப்போது இப்ராஹீம் கூறினார், உயிரளிக்கவும் மரணிக்கும்படியும் செய்கின்றானே, அவனே எனது பரிபாலனன். கூறினான், நானும் உயிரளிக்கின்றேன் மரணத்தையும் அளிக்கின்றேன். இப்ராஹீம் கூறினார், நிச்சயமாக இறைவன் சூரியனை கிழக்கிலிருந்து கொண்டு வருகின்றான், அதனை மேற்கிலிருந்து கொண்டுவாரும். நிராகரித்த அவன் திகைத்துப் போனான். இறைவன் அக்கிரமம் புரிகின்ற மக்களுக்கு வழிகாட்டுவதில்லை.
أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَـٰذِهِ ٱللَّـهُ بَعْدَ مَوْتِهَا فَأَمَاتَهُ ٱللَّـهُ مِا۟ئَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُۥ قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِّلنَّاسِ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّـهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
259. அல்லது ஒரு ஊரினைக் கடந்து சென்ற ஒருவரைப் போன்று. அங்கு அதன் அரியணைகள் பாழடைந்து கிடந்தன. கூறினார், இது இறந்த பின்பு இறைவன் இதை எப்படி உயிர்ப்பிப்பான். பின் நூறாண்டுகள் இறைவன் அவரை மரணத்தில் ஆக்கினான். பிறகு அவரை எழுப்பினான். கூறினான் எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்? கூறினார், ஒரு நாள் அல்லது நாளின் ஒரு பகுதி தங்கியிருந்தேன். கூறினான், உண்மையாதெனில் நூறாண்டுகள் தங்கியிருந்தீர். உமது உணவு மற்றும் உமது பானத்தை அவதானியும், ஒரு மாறுதலும் அடையவில்லை. உமது கழுதையையும் அவதானியும். மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாக உம்மை ஆக்குகின்றோம். அவ்வெலும்புகளை அவதானியும், அதனை எப்படி எழுப்புகின்றோம், அவற்றின் மேல் சதையைப் போர்த்துகின்றோம். பின் அவருக்கு தெளிவானதும் கூறினார், நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு விடயத்தின் மீதும் ஆற்றலுடையவன்-அளவிடுபவன் என்பதை அறிந்துகொண்டேன்.
وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ قَالَ أَوَلَمْ تُؤْمِن قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ ٱلطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ ٱجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ٱدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَٱعْلَمْ أَنَّ ٱللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ
260. இப்ராஹீம் கூறியதாவது, பரிபாலனே! மரணித்தவைகளை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்கு காண்பிப்பாயாக. கூறினான், உமக்கு நம்பிக்கை இல்லையா? கூறினார், என்றாலும் மெய்யாதெனில் எனது இதயம் அமைதி அடைவதற்காகவே. கூறினான், பறவைகளில் நான்கை எடுத்துக்கொள். உன்னோடு அவற்றை பயிற்றுவித்து-வளர்ப்பீராக. அவற்றிலிருந்து பகுதியை ஒவ்வொரு மலையின்மீது வைத்துவிடும். பிறகு அவற்றை அழையும். உம்மிடம் முற்பட்டு வரும். அறிந்துகொள்ளும், நிச்சயமாக இறைவன் மிகைத்தவன் ஞானமானவன்.
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّـهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّا۟ئَةُ حَبَّةٍ وَٱللَّـهُ يُضَـٰعِفُ لِمَن يَشَآءُ وَٱللَّـهُ وَٰسِعٌ عَلِيمٌ
261. இறைவனின் வழியில் தங்களது செல்வங்களை செலவிடுகின்றார்களே, அவர்களின் உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்றது. ஏழு கதிர்கள் முளைக்கின்றது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள். இறைவன் தான் நாடியோருக்கு பெருக்குகின்றான். இறைவன் விசாலமானவன் அறிந்தவன்.
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّـهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا۟ مَنًّا وَلَآ أَذًى لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
262. எவர்கள் இறைவனின் வழியில் தங்களது செல்வங்களை செலவிட்டு, பிறகு தாங்கள் செலவிட்ட உதவிகளை பின்தொடராமலும், அவர்களுக்கு சிரமம் கொடுக்காமலும் உள்ளார்களோ, அவர்களுக்கு அவர்களின் வெகுமதி அவர்களது பரிபாலனிடம் உள்ளது. அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَآ أَذًى وَٱللَّـهُ غَنِىٌّ حَلِيمٌ
263. தர்மத்தில் அதை பின்தொடர்ந்து சிரமப்படுத்துவதை விட – கனிவான சொல்லும், மன்னித்தலும் சிறந்ததாகும். இறைவன் தன்னிறைவானவன், சகிப்புத் தன்மையாளன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَـٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّـهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُۥ وَابِلٌ فَتَرَكَهُۥ صَلْدًا لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّمَّا كَسَبُوا۟ وَٱللَّـهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ
264. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! இறைவனைக் கொண்டு மறுமை நாளை நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்கள் காண்பதற்காக, தனது செல்வத்தை செலவிடுபவனைப் போன்று, உதவியதைக் கொண்டு சிரமப்படுத்தி, உங்களின் தர்மங்களை பாழாக்கி விடாதீர்கள். அதன் உதாரணம், பாறைகளின் உதாரணத்தைப் போன்றது. அதன் மீது மண்படிந்துள்ளது. பெருமழை அதில் விழுந்து, அதை வெற்றாக விட்டுவிடுகின்றது. அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு விடயத்தின்மீதும் அவர்கள் ஆற்றலோ-அளவீடோ பெறவில்லை. இறைவன் நிராகரிக்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதில்லை.
وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّـهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَٱللَّـهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
265. இறைவனின் திருப்தியை நாடியும், தங்களின் ஆன்மாக்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், தங்களின் செல்வங்களை செலவிடுகின்றார்களே, அவர்களின் உதாரணம், வளம்கொண்ட தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றது. பெருமழை அதில் விழுகின்றது. பின் தனது விளைச்சலை இரட்டிப்பாக்கி கொடுக்கின்றது. பெருமழை அதில் விழாவிட்டாலும் சாரல் உள்ளது. இறைவன் நீங்கள் செயல்படுவதுடன் பார்த்தவனாக உள்ளான்.
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلْكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعْصَارٌ فِيهِ نَارٌ فَٱحْتَرَقَتْ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّـهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
266. உங்களில் ஒருவராவது விரும்புவாரா? அது அவரிடம் பேரீச்சைகளும், திராட்சைகளுமான தோட்டம் உள்ளது. அதன்கீழே நதிகள் ஓடுகின்றது. அவரிடம் ஒவ்வொரு கனிவர்க்கங்களில் இருந்தும் உள்ளது. வயோதிகம் அவரிடம் விழுகின்றது. அவருக்கு சந்ததிகள் பலவீனர்களாக உள்ளர். புயற்காற்று அவற்றில் விழுகின்றது. அதில் நெருப்பு உள்ளது. பின் எரித்து விடுகின்றது. அவ்வாறே அத்தாட்சிகளை உங்களுக்கு இறைவன் தெளிவாக்குகின்றான், நீங்கள் சிந்திக்கும் பொருட்டு.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ أَخْرَجْنَا لَكُم مِّنَ ٱلْأَرْضِ وَلَا تَيَمَّمُوا۟ ٱلْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغْمِضُوا۟ فِيهِ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ غَنِىٌّ حَمِيدٌ
267. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! நீங்கள் சம்பாதிக்கின்ற மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தி தருவதில் நல்லவற்றில் இருந்து செலவிடுங்கள். நீங்கள் செலவிட அதிலிருந்து கெட்டதை நாடி-தடவாதீர்கள். அதில் நீங்கள் இருந்தால், முகம்சுளித்தே அன்றி அதை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். மேலும் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இறைவன் தன்னிறைவானவன் புகழானவன்.
ٱلشَّيْطَـٰنُ يَعِدُكُمُ ٱلْفَقْرَ وَيَأْمُرُكُم بِٱلْفَحْشَآءِ وَٱللَّـهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَٱللَّـهُ وَٰسِعٌ عَلِيمٌ
268. தீயோன் வறுமையை உங்களுக்கு வாக்களிக்கின்றான், மேலும் முறைகேடானதைக் கொண்டு உங்களை ஏவுகின்றான். இறைவன் தன்னிடமிருந்து மன்னிப்பிற்கு உரியதையும், கிருபையையும் வாக்களிக்கின்றான். இறைவன் விசாலமானவன் அறிந்தவன்.
يُؤْتِى ٱلْحِكْمَةَ مَن يَشَآءُ وَمَن يُؤْتَ ٱلْحِكْمَةَ فَقَدْ أُوتِىَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ
269. தான் நாடியோருக்கு ஞானத்தை கொண்டு வருகின்றான். ஞானம் கொடுக்கப் பெறுகின்றவர், திடனாக ஏராளமான நன்மைகளை கொடுக்கப் பெறுகின்றார். உணர்வுடையோர் தவிர நினைவில் கொள்வதில்லை.
وَمَآ أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ ٱللَّـهَ يَعْلَمُهُۥ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
270. செலவு வகையிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அல்லது நேர்ச்சையிலிருந்து நீங்கள் எதை நேர்ச்சை செய்தாலும், நிச்சயமாக இறைவன் அதை அறிவான். அக்கிரமக்காரர்களுக்கு யாதொரு உதவியுமில்லை.
إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ وَٱللَّـهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
271. தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது அருள்தான். அதனை நீங்கள் மறைவாக ஏழை-எளியோருக்கு கொடுப்பீர்களாயின், உங்களுக்கு அது இன்னும் சிறந்தது. உங்களின் தீங்குகளிலிருந்து, உங்களை நீக்குகின்றது. இறைவன் உங்களது செயல்களுடன் விழிப்பானவன்.
لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَـٰكِنَّ ٱللَّـهَ يَهْدِى مَن يَشَآءُ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّـهِ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
272. அவர்களை வழிநடத்துவது உம்மீது அல்ல. எனினும் இறைவன் தான் நாடியோருக்கு வழிகாட்டுகின்றான். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், உங்களின் ஆன்மாக்களுக்கே ஆகும். இறைவனின் முகத்தை நாடியே அன்றி செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், உங்களுக்கு முழுமையாகக் கொடுக்கப்படும். நீங்கள் அக்கிரமம் இழைக்கப்பட மாட்டீர்கள்.
لِلْفُقَرَآءِ ٱلَّذِينَ أُحْصِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّـهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِى ٱلْأَرْضِ يَحْسَبُهُمُ ٱلْجَاهِلُ أَغْنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَـٰهُمْ لَا يَسْـَٔلُونَ ٱلنَّاسَ إِلْحَافًا وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّـهَ بِهِۦ عَلِيمٌ
273. இறைவனின் வழியில் முடக்கப்பட்டவர்களாக, பூமியில் அடியெடுக்க இயலாதவர்களாக இருக்கும் ஏழை-எளியோருக்காக. அவர்களின் பேணுதலினால், நிறைவாக உள்ளோர் என, அறியாமை எண்ணவைக்கின்றது. அவர்களின் அடையாளங்களைக் கொண்டு, அவர்களை கண்டுகொள்வீர். வற்புறுத்தி மனிதர்களிடம் கேட்கமாட்டார்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், நிச்சயமாக இறைவன் அதனுடன் அறிந்தவன்.
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
274. எவர்கள் தங்களின் செல்வங்களை இரவும், பகலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும், செலவு செய்கின்றார்களோ, பின் அவர்களுக்கு அவர்களின் வெகுமதி, அவர்களது பரிபாலனிடம் உள்ளது. அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَـٰنُ مِنَ ٱلْمَسِّ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ وَأَحَلَّ ٱللَّـهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّـهِ وَمَنْ عَادَ فَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
275. ரிபா உண்கின்றவர்கள், தீயோனால் தீண்டுதலுக்கு உள்ளாகி பித்துபிடித்து உள்ளவன் நிற்பதைப் போன்றே அன்றி நிற்கமாட்டார்கள். நிச்சயமாக அது, ரிபாவின் உதாரணமே ஒப்பந்தமும் – என்று நிச்சயமாக அவர்கள் கூறுவதால் ஆகும். இறைவன் ஒப்பந்தத்தை ஆகுமாக்கியுள்ளான். ரிபாவை கட்டுப்பாடு இட்டுள்ளான். யார் தனது பரிபாலனிடம் இருந்து அறிவுரை வந்தபின் நிறுத்திக் கொள்கின்றாரோ, அவரிடம் கடந்தவை உள்ளது. அதன் காரியம் இறைவனிடம் உள்ளது. எவர் தொடர்கின்றாரோ, அத்தகையோர் நெருப்பின் கூட்டாளிகளே. அதில் அவர்கள் என்றென்றும் ஆகின்றர்.
“ரிபா (رِّبَا) என்ற வார்த்தைக்கு ‘வட்டி’ என்று பொருள். இதை விட பொதுவான அர்த்தங்களாக ‘அதிகரித்தல்’, ‘அதிகரித்தபடி மிதமிஞ்சி போதல்’ என்றும் பொருள்படும்.
يَمْحَقُ ٱللَّـهُ ٱلرِّبَوٰا۟ وَيُرْبِى ٱلصَّدَقَـٰتِ وَٱللَّـهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
276. ரிபாவை இறைவன் அழிக்கின்றான். தர்மங்களை அபிவிருத்தி செய்கின்றான். நன்றி-மறுக்கின்ற குற்றம்புரிகின்ற யாதொன்றையும் இறைவன் நேசிப்பதில்லை.
“ரிபா (رِّبَا) என்ற வார்த்தைக்கு ‘வட்டி’ என்று பொருள். இதை விட பொதுவான அர்த்தங்களாக ‘அதிகரித்தல்’, ‘அதிகரித்தபடி மிதமிஞ்சி போதல்’ என்றும் பொருள்படும்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
277. எவர்கள் நம்பிக்கை வைத்தவர்களாக, செயல்களில் சீர்பட்டவர்களாக, தொடர்பை நிலைநாட்டியவர்களாக, தூய்மையை கொண்டு வருகின்றார்களோ – அவர்களுக்கு அவர்களின் வெகுமதி, அவர்களது பரிபாலனிடம் உள்ளது. அவர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் துக்கத்திலும் ஆகமாட்டார்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّـهَ وَذَرُوا۟ مَا بَقِىَ مِنَ ٱلرِّبَوٰٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ
278. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். ரிபாவில் எஞ்சிவுதை விட்டுவிடுங்கள், நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின்.
“ரிபா (رِّبَا) என்ற வார்த்தைக்கு ‘வட்டி’ என்று பொருள். இதை விட பொதுவான அர்த்தங்களாக ‘அதிகரித்தல்’, ‘அதிகரித்தபடி மிதமிஞ்சி போதல்’ என்றும் பொருள்படும்.
فَإِن لَّمْ تَفْعَلُوا۟ فَأْذَنُوا۟ بِحَرْبٍ مِّنَ ٱللَّـهِ وَرَسُولِهِۦ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَٰلِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
279. நீங்கள் செய்யாவிடில், இறைவன் மற்றும் அவனது தூதிடமிருந்து போர் அறிவிக்கப் படுகின்றது. மீட்சி தேடுவீர்களாயின், உங்களது செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உள்ளது. அநீதம் இழைக்காதீர்கள். உங்களுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
280. சிரமத்தோடு இருக்கின்றார் எனில், இலகுவாகும் வரை அவதானிக்கவும். தர்மமாக ஆக்குவீர்களாயின், உங்களுக்கு இன்னும் சிறந்தது, நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருப்பின்.
وَٱتَّقُوا۟ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى ٱللَّـهِ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
281. ஒரு நாளை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். அதில் இறைவனின் பக்கம் மீட்டப் படுகின்றீர்கள். பிறகு ஒவ்வொரு ஆன்மாவும் அது சம்பாதித்ததை முழுமையாகக் கொடுக்கப் படுகின்றது.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّـهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّـهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُو فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّـهِ وَأَقْوَمُ لِلشَّهَـٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ إِلَّآ أَن تَكُونَ تِجَـٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّـهَ وَيُعَلِّمُكُمُ ٱللَّـهُ وَٱللَّـهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
282. ஓ நம்பிக்கை கொள்பவர்களே! கடனைக் கொண்டு குறிப்பிட்ட தவனைக்கு நீங்கள் கடன்-ஒப்பந்தம் செய்யும்போது, அதை எழுதிக் கொள்ளுங்கள். எழுதுபவர் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவர் இறைவன் அவருக்கு அறிவித்துக் கொடுத்தபடி எழுதிக்கொள்ள மறுக்கவேண்டாம். ஆக எழுதிக்கொள்ளட்டும். எவர்மீது அந்த சத்தியமுள்ளதோ, அவர் வாசிக்கட்டும். தன்னை பரிபாலிக்கும் இறைவனை உணர்ந்தறிந்து-பண்பட்டு நடக்கட்டும். ஒரு விடயத்தையும் அதில் குறைத்துவிட வேண்டாம். எவர்மீது அந்த சத்தியமுள்ளதோ, அவர் மடமையாகவோ அல்லது பலவீனராகவோ அல்லது அதை வாசிக்க இயலாதவராகவோ இருப்பின், அவரது பொறுப்பாளி நீதியுடன் வாசிக்கட்டும். உங்கள் ஆடவர்களில் இருந்து இரு சாட்சிகளை சாட்சிக்கு தேடிக்கொள்ளுங்கள். இரு ஆடவர்கள் இருக்கவில்லை என்றால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்திக் கொண்டவர்களில் இருந்து ஒரு ஆடவரும், இரு பெண்களும். அவ்விருவரில் ஒருவள் தவறினாலும், அவ்விருவரில் மற்றொருவள் நினைவூட்டுவாள். சாட்சிகள் அழைக்கப்படும் போது மறுக்கவேண்டாம். சிறிதோ அல்லது பெரிதோ, அதன் தவணையை எழுதிக்கொள்வதில் சலித்துக் கொள்ளாதீர்கள். அது இறைவனிடம் நீதமானதாக உள்ளது. நிற்கும் சாட்சியமாகவும், நெருக்கமானதாகவும் உள்ளது. அதுவல்லாது உங்களிடையே நீங்கள் சமாளித்துக் கொள்ளும் அன்றாட வாணிபமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாததால், உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எழுதுபவரை துன்புறுத்துதல் கூடாது. சாட்சியையும் கூடாது. செய்வீர்களாயின், நிச்சயமாக அது உங்களுடன் கலகம்சேரும். இறைவனை உணர்ந்தறிந்து-பண்படுங்கள். இறைவன் உங்களுக்கு அறிவித்தும் தருகின்றான். இறைவன் ஒவ்வொரு விடயத்துடனும் அறிந்தவன்.
وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا۟ كَاتِبًا فَرِهَـٰنٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ ٱلَّذِى ٱؤْتُمِنَ أَمَـٰنَتَهُۥ وَلْيَتَّقِ ٱللَّـهَ رَبَّهُۥ وَلَا تَكْتُمُوا۟ ٱلشَّهَـٰدَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٌ قَلْبُهُۥ وَٱللَّـهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
283. நீங்கள் பிரயாணத்தில் இருந்து, எழுதிக்கொள்ள ஒன்றும் கிட்டாத பட்சத்தில், கைவசமுள்ளதை பணயமாக்கிக் கொள்ளவும். உங்களில் சிலர் சிலரை நம்புகையில், நம்பப்பட்டவர் நம்பப்படுவதை திருப்பிடட்டும். தன்னை பரிபாலிக்கும் இறைவனை உணர்ந்தறிந்து-பண்பட்டு நடக்கட்டும். சாட்சியை மறைக்காதீர்கள். எவர் அதை மறைக்கின்றாரோ, அவரது இதயத்திற்கு நிச்சயமாக அது தீங்காகின்றது. இறைவன் உங்களது செயல்களுடன் அறிந்தவனாக உள்ளான்.
لِّلَّـهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَإِن تُبْدُوا۟ مَا فِىٓ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ ٱللَّـهُ فَيَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ وَٱللَّـهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
284. வானங்களிலுள்ள யாவும், பூமியிலுள்ள யாவும் இறைவனிடமே. உங்கள் ஆன்மாக்களில் உள்ளதை, நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை நீங்கள் மறைத்தாலும், இறைவன் அதைக்கொண்டு உங்களை கணக்கிடுவான். பின் தான் நாடியதற்கு மன்னிப்பளிக்கின்றான். தான் நாடியவற்றை தண்டிக்கின்றான். இறைவன் ஒவ்வொரு விடயத்தின்மீதும் ஆற்றலுடையவன் – அளவிடுபவன்.
ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ كُلٌّ ءَامَنَ بِٱللَّـهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِۦ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
285. தூதானது தனது பரிபாலனிடம் இருந்து தனக்கு இறக்கப்படுவதைக் கொண்டு நம்பிக்கை கொள்கின்றது. நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இறைவனைக் கொண்டு, அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதுகளையும் – நம்பிக்கை கொள்கின்றர். அவனது தூதுகளில் ஒன்றுக்கிடையேயும் பாகுபாடு செய்யமாட்டோம். மேலும் கூறுகின்றனர், செவிமடுக்கின்றோம், கட்டும்படுகின்றோம். உமது மன்னிப்பை எங்களுக்கு அளிப்பாயாக எங்கள் பரிபாலனே!. உன்னிடமே மீளுதல் உள்ளது.
لَا يُكَلِّفُ ٱللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
286. இறைவன் ஒரு ஆன்மாவையும் அது தாங்கிக் கொள்ளாததை சுமத்துபவனாக இல்லை. அது சம்பாதித்தது அதற்கே. அது சம்பாதிக்கின்றவை அதன்மீதே உள்ளது. எங்கள் பரிபாலனே! நாங்கள் மறந்துவிட்டாலோ அல்லது நாங்கள் குறைசெய்து விட்டாலோ எங்களை நீ பிடித்துவிட வேண்டாமே. எங்களுக்கு முன்னுள்ளோர் மீது நீ சுமத்தியது போன்று சுமையை எங்கள்மீது நீ சுமத்திட வேண்டாமே. எங்கள் பரிபாலனே! எதைக்கொண்டு எங்களுக்கு தெம்பில்லையோ, அதனை எங்களிடம் நீ சுமத்திட வேண்டாமே. எங்கள்மேல் பொறுத்துக் கொள்வாயாக. எங்களுக்கு மன்னிப்பளிப்பாயாக. எங்கள்மீது கருணை புரிவாயாக. நீயே எங்கள் பாதுகாவலன். ஆக நிராகரிக்கும் மக்களின் மீது எங்களுக்கு உதவிபுரிவாயாக.